இயேசுநாதரை கோட்சே சுட்டுட்டாரா.. குண்டை தூக்கிப்போட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!

By vinoth kumarFirst Published Dec 30, 2020, 6:31 PM IST
Highlights

திண்டுக்கல்லில் விழா ஒன்றில் இயேசுநாதரை சுட்டுக் கொன்ற கோட்சே என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல்லில் விழா ஒன்றில் இயேசுநாதரை சுட்டுக் கொன்ற கோட்சே என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிப்பாடி, தாமரைப்பாடி, பாலகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் மினி கிளினிக்குகளை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று திறந்து வைத்தார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ``எந்தத் திட்டத்தைச் செய்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டிக்கொண்டே இருக்கிறார். ரூ.2,500 ஒவ்வொரு வீட்டுக்கும் பொங்கல் பரிசு கொடுக்கிறோம். கூடவே வேட்டி, சேலை கொடுக்கிறோம். மொத்த மதிப்பு ரூ.3,000. இதை ஏமாற்று வேலை என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். 

மாமியார் உடைத்தால் மண் குடம், மருகமள் உடைத்தால் பொன்குடம்’ என்பதுபோல இருக்கிறது. தி.மு.க ஆட்சியில், அவங்க அப்பா இதெல்லாம் செய்திருந்தால், புத்தர் வாரிசு, இயேசுநாதர் வாரிசு என்பார்கள். நாங்கள் செய்திருந்தால், இயேசுநாதரைச் சுட்ட கோட்சே வாரிசு மாதிரி... எது செஞ்சாலும் தப்பு. `நன்மை செய்வோம்’னு சொல்லித்தான் ஓட்டுக் கேட்டு வந்திருக்கோம் என்றார்.

இயேசுநாதரைச் சுட்ட கோட்சே வாரிசு’ என அமைச்சர் பேசியதும், மேடையில் அமர்ந்திருந்த நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அ.தி.மு.க-வினரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். அமைச்சர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சர்ச்சையாகவும் காமெடியாகவும் பேசிவதில் புகழ்பெற்றவர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். பேச்சில் மட்டுமல்ல, சிறுவனை தனது காலணிகளை எடுக்கச் சொல்லி செயலிலும் சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!