பல பேர் என்னை லவ் பண்றது, எனக்கு சந்தோஷத்தை தருது: யார், யார் சொன்னது?

Asianet News Tamil  
Published : Feb 16, 2018, 06:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
பல பேர் என்னை லவ் பண்றது, எனக்கு சந்தோஷத்தை தருது: யார், யார் சொன்னது?

சுருக்கம்

Many people love megive me the happiness who who said

உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு  இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும்

சொல்லுக்கு  ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே.

அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி.

#    ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக சசிகலா இருந்தாரா? இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
-    (ஜெ., உதவியாளர் கார்த்திகேயனிடம்) நீதிபதி ஆறுமுகசாமி)

#    தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
-    ஓ.பன்னீர்செல்வம்

#    தமிழக மாணவர்கள் மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து தேர்வுகளையும் சமாளிப்பார்கள்.
-    செங்கோட்டையன்

#     பாடலில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக டைரக்டர் சொன்னபடி கண்ணடித்தும், புருவத்தை உயர்த்தியும் நடித்தேன். என் மீது பலர் காதலில் விழுந்திருப்பதாக சொல்கிறார்கள். இது எனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
-    பிரியா வாரியர்

#    தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்று சில சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. அவற்றையெல்லாம் முறியடித்து நிச்சயம் இந்த கழகம் வெற்றி பெறும்.
-    கனிமொழி

#    ரஜினிகாந்த் என்னுடைய நல்ல நண்பர். அவர் அரசியலுக்கு வரவேண்டாம் என்று நினைக்கிறேன். சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டுமென்றால் கர்நாடகாவுக்கு போய் சரிசெய்யட்டும்.
-    ராதாரவி

#    திரைப்படங்களில் நான் நடிக்கப்போவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. முழு நேர அரசியலுக்கு வந்த பிறகே நடிப்பை தொடர்வது குறித்து முடிவெடுப்பேன்
-    கமல்ஹாசன்

#    ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறந்தது என்பது, ஆட்டோ சங்கர், சந்தன கடத்தல் வீரப்பன் ஆகியோரின் படங்களை திறப்பதற்கு சமம்.
-    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

#    மதச்சார்பற்ற அரசு என்று தன்னை சொல்லிக் கொள்ளும் தமிழக அரசு, இந்து சமய கோயில்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஏன்?
-    ஹெச்.ராஜா

#    முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இவர்களின் ஓராண்டு கால ஆட்சி பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.
-    பிரேமலதா

PREV
click me!

Recommended Stories

5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!
‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!