டெல்லி மதக் கூட்டத்தில் கலந்துகொண்ட மலேசிய முஸ்லீம்கள் ; பொய் சொல்லி தப்ப முயற்சி;சுற்றிவளைத்த டெல்லி போலீஸ்

Published : Apr 05, 2020, 08:47 PM IST
டெல்லி மதக்  கூட்டத்தில் கலந்துகொண்ட மலேசிய முஸ்லீம்கள் ; பொய் சொல்லி தப்ப முயற்சி;சுற்றிவளைத்த டெல்லி போலீஸ்

சுருக்கம்

டெல்லி தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட 8 மலேசியர்கள், டெல்லியில் இருந்து மீட்பு விமானத்தில் பறக்க முயற்சித்தப்போது பிடிப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

T.Balamurukan

டெல்லி தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட 8 மலேசியர்கள், டெல்லியில் இருந்து மீட்பு விமானத்தில் பறக்க முயற்சித்தப்போது பிடிப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நிஜாமுதீன் மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 2500 பேர் இருக்கும் அளவிற்கு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.கொரோனா பாதிப்பு பட்டியலில் டெல்லி சென்று வந்தவர்களுக்கு தான் அதிகமான அளவில் பாசிட்டிவ் இருப்பதாக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில்,டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக 8 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மலேசிய சிட்டிசன்கள். அண்மையில் நிஜாமுதீனில் நடந்த தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியில்  பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல இருப்பதை அங்குள்ள அதிகாரிகள் கண்டுபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இந்தியாவில் இருந்து மலேசியாவுக்குச் சென்று கொண்டிருந்த மீட்பு விமானத்தில் ஏற முயன்றபோது இந்த 8 மலேசியர்களும் பிடிப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
 

PREV
click me!

Recommended Stories

Rajini Speech: ரஜினிகாந்த் பேசியதால் பரபரப்பான 10 சம்பவங்கள்... இன்னும் மறக்காத தமிழகம்! ஒரு சுவாரஸ்யமான லிஸ்ட்.!
TASMAC Issue: "மதுவிலக்கு இல்லையா? அப்படின்னா குறைந்தபட்சம் தரமான சரக்காவது கொடுங்க!" – விஜய் அரசுக்கு மக்கள் வைக்கும் 7 கோரிக்கைகள்