மதுரை: பெரும்பிடுகுமுத்தரையருக்கு வெண்கலச்சிலை.. குட்டைய குழப்பும் திமுக எம்எல்ஏ.! கடுகடுக்கும் தொகுதி மக்கள்!

By T BalamurukanFirst Published Nov 9, 2020, 12:25 AM IST
Highlights

மதுரையில் முத்தரையருக்கு சிலை வைப்பதில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்வம் காட்டி அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ஆனால் சொந்தக்கட்சிக்குள்ளே சூனியம் வைப்பது போல்திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ முத்தரையர் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக தொகுதிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
 


மதுரையில் முத்தரையருக்கு சிலை வைப்பதில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்வம் காட்டி அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ஆனால் சொந்தக்கட்சிக்குள்ளே சூனியம் வைப்பது போல் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ முத்தரையர் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக தொகுதிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.


 
மதுரைக்குட்பட்ட சட்டமன்றத்தொகுதிகளில் ஒன்று திருப்பரங்குன்றம்.இந்த தொகுதியில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின் போது திமுக தலைவர் ஸ்டாலின் தனது வேட்பாளரான டாக்டர்.சரவணனை ஆதரித்து வலையங்குளம் கிராமத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசியவர்..' டாக்டர்.சரவணன் வெற்றி பெற்றால் இங்கே முத்தரையர் மக்களின் சமூகத்தலவரான "பெரும்பிடுகு முத்தரையர்" வெங்கலச்சிலை நிறுவப்படும் என்று வாக்குறுதியளித்தார். அதன் பிறகு டாக்டர்.சரவணன் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எம்எல்ஏ டாக்டர் சரவணன் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை வைக்க அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்டு அதன் பிறகு சுவாமி மலையில் இருக்கும் சிற்பி ராகவனிடம் சுமார் 8 அடி உயரமுள்ள சிலை செய்ய  சுமார் 8லட்சம் செலவு செய்து ஆடர் கொடுத்துள்ளார்.

 திருப்பரங்குன்றம் தொகுதி தெற்கு மாவட்டத்திற்குள் வருகிறது. ஆனால் சம்மந்தமே இல்லாத திமுக வடக்கு மாவட்டச்செயலாளரும், கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான மூர்த்தி திருப்பரங்குன்றம் தொகுதிக்குள் நுழைந்து முத்தரையர் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும். அந்த மக்களிடம் சென்று முத்தரை சிலை நாங்கள் வைத்து தருகிறோம் என்று பேச.. அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் ஏற்கனவே எம்எல்ஏ டாக்டர்.சரவணன் சிலை வைப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து சிலையும் செய்து முடித்துவிட்டார். நீங்கள் என்ன புதுசா சிலை வைக்க போறீங்க. அவரும் திமுக எம்எல்ஏ தானே.! பிறகு ஏன் நீங்கள் வந்து குழப்பத்தை ஏற்படுத்துறீங்கனு கேட்டதும். இல்ல..இல்ல எல்லாமே திமுக தான்னு சொல்லி திமுக எம்எல்ஏ மூர்த்தியும், மாவட்டச்செயலாளர் மணிமாறனும் நழுவிட்டார்களாம்.

இந்த தகவல் தெரிந்த வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா வலையங்குளம் கிராம மக்களிடம் நாங்கள் உங்கள் பகுதியில் முத்தரையருக்கு  சிலை வைத்து தருகிறோம் என்று சொல்ல.. இல்லை எங்க தொகுதி எம்எல்ஏ டாக்டர் சரவணன் சிலை செய்ய ஆடர் கொடுத்துட்டாருனு சொன்னதும் ஒருமாதிரியான ராஜன்செல்லப்பா.. ஒருகட்டத்தில் "மணி மண்டபம்" கட்டி தர்றோம்னு சொல்லியிருக்கிறாராம். திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட தயாராக களமிறங்கி இருக்கும் ராஜன்செல்லப்பா முத்தரையர் சமூக மக்களின் வாக்குகளை கவர் செய்ய இதுபோன்று வாக்குறுதி அளித்து வருகிறார் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். 

மதுரையில் திமுக எம்எல்ஏக்கள் மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த மோதலை திமுக தலைமை எப்படி கையாளப்போகிறது என்று தெரியவில்லை என கட்சி நிர்வாகிகள் புலம்பல் சத்தம் மதுரை முழுவதும் கேட்க தொடங்கியிருக்கிறது.

click me!