கொள்ளைப் பணத்தில் ஓட்டுகளை விலைக்கு வாங்கத் திட்டம்... பகீர் கிளப்பும் உதயநிதி ஸ்டாலின்..!

By Asianet TamilFirst Published Nov 8, 2020, 10:14 PM IST
Highlights

கொள்ளை பணத்தின் ஒரு பகுதியை தமிழகம் முழுவதும் பிரித்தளித்து வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என அடிமைகள் நினைக்கின்றனர் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக ட்விட்டரில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் தரப்பட்ட ஊழல் பணத்தை வசூலிக்க, ’பணத்தைக்கொடு-உடலை எடு’ என அவரின் குடும்பத்தை நெருக்கியதாக செய்திகள் வருகின்றன. துரைக்கண்ணுவிடமே 800 கோடி என்றால் ஒட்டுமொத்த அடிமைகளிடமும் எவ்வளவு இருக்கும்?

 
அசாதாரணங்கள் அடிமைகள் ஆட்சியில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. அடிமைகளை மேலும் அடிமைகளாக்க தமிழகத்தை ஓவர்டைம் எடுத்து கவனிக்கும் இன்கம்டாக்ஸ், சிபிஐ... போன்றவை இவ்விஷயத்தில் மயான அமைதி காக்கின்றன. ஆர்.கே நகர் தேர்தல் பணப்பட்டுவாடா பட்டியலில் முதல்வர் உட்பட அமைச்சர்களின் பெயர் ஆதாரங்களுடன் கிடைத்தும் அவ்வழக்கு என்னானது என இதுவரை தெரியவில்லை.
மக்கள்-சட்டம்-ஜனநாயகம்-ஊடகம்... இப்படி எதன்மீதும் அடிமைகளுக்கு மரியாதையோ, பயமோ இல்லை என்பதற்கு துரைக்கண்ணு விவகாரம் மேலும் ஒரு சான்று. கொள்ளை பணத்தின் ஒரு பகுதியை தமிழகம் முழுவதும் பிரித்தளித்து வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என அடிமைகள் நினைக்கின்றனர். ஆனால், அது இம்முறை நடக்காது.” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!