ஜூன் 30-ம் தேதி வரை ஊடங்கு நீட்டிப்பு... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு...!

By vinoth kumarFirst Published May 31, 2020, 8:34 AM IST
Highlights

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஜூன் 1-ம் தேதி முதல் பொதுமுடக்கம் நீடிக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஜூன் 1-ம் தேதி முதல் பொதுமுடக்கம் நீடிக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் 8-ம் தேதியில் இருந்து வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், மால்களை திறக்க அனுமதி அளித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடைகள் அப்படியே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!