
ஒரு காலத்தில் ரஜினியின் படமென்றால் எந்த பஞ்சாயத்து, சர்ச்சைகளும் இல்லாமல் வெளியாகும். காரணம், எந்த சமூக பார்வையும் இல்லாமல் வெறுமனே ஆட்டம், சண்டை, காதல் என்று தட்டையான அம்சங்களுடன் அவரது படங்கள் வெளியாகும்.
ஆனால் பாபாவில் ‘சிகரெட் குடிக்காம, தண்ணியடிக்காம நடிங்க’ என்று பா.ம.க. டீம் அட்வைஸ, ரஜினி முறிக்க, வெடித்துக் கிளம்பியது சர்ச்சை. பாபா படத்தின் பொட்டியை தூக்கிக் கொண்டு பா.ம.க.வின் அதிரடிப்படை எஸ்கேப் ஆகுமளவுக்கு பஞ்சாயத்து பட்டையை கிளப்பியது.
அதன் பிறகு ரஜினியின் படங்களுக்கு ரிலீஸ் சமயத்தில் பெரிய சிக்கல்கள் வெடித்ததில்லை. படம் தோற்றால் மட்டும் ‘படம் பயங்கர ஃபிளாப், நஷ்ட ஈடு கொடுங்க!’ என்று குரல்கள் கேட்பது வழக்கமாகியது.
அதாவது காலா படத்தின் இயக்குநர் ரஞ்சித்துக்கும், மாஜி இயக்குநர் பிளஸ் தற்கால அரசியல்வாதி சீமானுக்கும் இடையில் முட்டல் உருவானதும், அது பிற்பாடு பஞ்சாயத்து பேசப்பட்டதும் தெரிந்த சேதி. வெளிப்பார்வைக்கு அது அடங்கிவிட்டாலுங்கூட உள்ளுக்குள் பிரச்னை பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள்.
இது சீமானின் டீமின் காதுகளையும் எட்ட, கொதித்துப் போய்விட்டார்களாம். சீமான் இதில் டென்ஷனாக, அவரால் ‘என் பிள்ளைகள்’ என்று வாஞ்சையாக அழைக்கப்படும் அவரது இயக்க நிர்வாகிகள் ‘ப்ரிவியூ ஷோவோ, ரஷ் டைமிலேயோ அல்லது ரிலீஸான முதல் ஷோவோ அந்த படத்தை நம்மாளுங்க பார்த்துடணும்.
பிள்ளைகளின் இந்த ‘ஆபரேஷன் காலா’ பிளான் சீமானுக்கு தெரியுமா என்பது புரியவில்லை!