காங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை குஷ்பு விலகல்..? ட்விட்டரில் அதிரடி அறிவிப்பு..!

By Asianet TamilFirst Published Apr 6, 2019, 7:53 AM IST
Highlights

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இதுவரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாத நடிகை குஷ்பு, தான் கட்சியிலிருந்து விலகியதாக வெளியாகி உள்ள செய்தியை மறுத்துள்ளார்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட நடிகை குஷ்பு ஆர்வம் காட்டிவந்தார். ஆனால், அவருக்கு சீட்டு கொடுக்கப்படவில்லை. மகாராஷ்டிராவில் கட்சியில் சேர்ந்த அடுத்த நாளே நடிகை ஊமிளாவுக்கு சீட்டு வழங்கப்பட்ட நிலையில், கட்சியில் 7 ஆண்டுகளாக இருக்கும் தனக்கு சீட்டு வழங்காததால் குஷ்பு அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது.


காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்ய அழைத்தும், குஷ்பு சாக்குபோக்குச் சொல்லி வரவில்லை என்றும் அக்கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டன. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை குஷ்பு விலகப் போகிறார் என்ற செய்தி வட்டமடிக்கத் தொடங்கியது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகப்போவதாக வந்த தகவல்களை குஷ்பு மறுத்திருக்கிறார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.


 “நான் காங்கிரஸிலிருந்து விலகுகிறேனா? எங்கிருந்து இந்தச் செய்திகள் எல்லாம் வருகிறது? இந்த நாட்டை உருவாக்கிய ஓர் இயக்கத்தின் அங்கம் நான். காங்கிரஸ் கட்சியின் ஊழியராக இருப்பதில் நான் பெருமையடைகிறேன். நான் ராகுல் காந்தியை நம்புகிறேன். நாளை முதல் தென் மாநிலங்கள் முழுவதும் பிரச்சாரம் தொடங்குகிறேன். ஐ யாம் காங்கிரஸ்” என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.
 

click me!