
அண்ணா , எம்ஜிஆர் , ஜெயலலிதா , கருணாநிதி உழைப்பால் முதல்வர் ஆனார்கள் , உங்களுக்கு அப்படி என்ன தகுதி இருக்கு என்று சசிகலாவுக்கு கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திராவிட இயக்க வரலாற்றே மக்களை நேசித்த அண்ணா தியாகம் செய்தார் முதல்வரானார், எம்ஜிஆர் மக்களை நேசித்தார் ,தியாகம் செய்து முதல்வரானார், அம்மா அவர்கள் மக்களை நேசித்து தியாகம் செய்து முதல்வாரானார், கருணாநிதி அவர்களும் மக்களை நேசித்தார் முதல்வரானார் ,
ஆனால் எந்த வித தியாகமும் செய்யாமல் , எந்த வித அரசியல் வரலாறும் இல்லாமல் சதிக்கும்பல் தலைவியாக இருந்து சதி செய்து , புரட்சித்தலைவி அம்மா மறைந்து 60 நாட்கள் கூட ஆகவில்லை, அவர்கள் மறைந்த ,மண் ஈரம் கூட காயவில்லை பின்புற கதவில் வந்து பதவி ஏற்றுள்ளார்.
திராவிட அரசியல் வரலாற்றில் பதவி ஏற்பு கரும்புள்ளியை ஏற்படுத்திவிடும். அதை ஏற்படுத்தி உள்ளார். ஆகவே அத்தகைய ஒரு நிலையை ஏற்படுத்திவிடாதீர்கள்.