"கூவத்தூரில் பொதுமக்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே கடும் மோதல்" - எம்.எல்.ஏக்களை வெளியேற்ற கோரிக்கை

Asianet News Tamil  
Published : Feb 09, 2017, 08:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
"கூவத்தூரில் பொதுமக்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே கடும் மோதல்" - எம்.எல்.ஏக்களை வெளியேற்ற கோரிக்கை

சுருக்கம்

கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் உள்ள “கோல்டன் பே ரிசார்ட்” எனும் கடற்கரை சொகுசு ஓட்டலில் 115 எம்.எல்.ஏக்கள் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை சிறைபிடித்த நிமிடத்திலிருந்து செல்போன் பேசகூடாது.

அப்படி செல்போன் பேசினால் ஸ்பீக்கரில் தான் பேச வேண்டும் என கடுமையான கட்டுபாடுகள் விதித்து மன உளைச்சலை உருவாக்கி உள்ளனர் சசிகலா தரப்பினர். 

இன்று காலை அதுவும் கிடையாது செல்போன் ஜாமர் வைத்தமையால் குடும்பத்தினருடன் பேசமுடியாது என பல எம்.எல்,ஏக்கள் குமுறியுள்ளனர்.

இதனால் மனம் வெருத்து போன 12 எம்.எல்.ஏக்கள் விடுதலை செய்ய வேண்டும் என காலையில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கூவத்தூர் பகுதி மக்கள் தங்களுக்கு வீதிகளில் நடக்க அனுமதி மறுக்கபடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் அனைவரையும் உடனே வெளியேற்ற வேண்டும் என கூவத்தூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!