கேரளாவில் கொரோனோவுக்கு முதல் மரணம்...!! அதிர்ச்சியில் மக்கள், பீதியில் பினராய் அரசு..!!

Published : Mar 28, 2020, 01:47 PM IST
கேரளாவில் கொரோனோவுக்கு முதல் மரணம்...!! அதிர்ச்சியில் மக்கள், பீதியில் பினராய் அரசு..!!

சுருக்கம்

இந்நிலையில் மருத்துவர்கள் அவளை காப்பாற்ற எவ்வளவோ போராடியும் அந்த நபர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .  இது கேரளாவில் கொரோனா வைரசுக்கு  ஏற்பட்ட முதல் மரணம் என பதிவு செய்யப்பட்டுள்ளது . 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கேரள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் , அவருக்கு வயது 69,   இதனை அடுத்து கொரோனா  வைரசுக்கு கேரளாவின் உயிரிழந்த முதல் நபர் என அறிவிக்கப்பட்டுள்ளார் .  இதன் மூலம் இந்தியாவில் கொரோனா  வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது .  சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா  வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  இந்நிலையில் இந்தியாவில் வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.  

இந்நிலையில் கேரளா கொரோனாவால்  அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்து வருகிறது .  இந்நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் காரணமாக முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அம்மாநில அரசு உறுதி செய்துள்ளது . கடந்த மார்ச் 22ஆம் தேதி சளி இருமல் அறிகுறிகளுடன் 69 வயது நபர் ஒருவர் கொச்சியில் உள்ள காலமாச்சேரி அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு  சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது . அவரது உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது . 

இந்நிலையில் மருத்துவர்கள் அவளை காப்பாற்ற எவ்வளவோ போராடியும் அந்த நபர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .  இது கேரளாவில் கொரோனா வைரசுக்கு  ஏற்பட்ட முதல் மரணம் என பதிவு செய்யப்பட்டுள்ளது .  ஏற்கனவே அந்த நபர் இதய நோய் மற்றும் ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்ததும் ,  அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததும்  குறிப்பிடத்தக்கது .  இந்நிலையில் அவரது  சடலத்தை அவரது உறவினர்களிடம் மாநில அரசு அதிகாரிகள் ஒப்படைத்தனர் இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 21 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!