எல்லா பக்கமும் கேட் போட்டாச்சு... காசுக்கு கைக்கூலியாக மாறிய கருணாஸ் கட்சி... கொந்தளிக்கும் நலச்சங்கம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 1, 2021, 6:52 PM IST
Highlights

தற்போது தனித்து விடப்பட்ட கருணாஸ் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க அவரது ஆதரவாளர்கள், லோக்கல் தொகுதி திமுகவினரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.  
 

முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த கருணாஸ் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருவாடனை தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். அடுத்து ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கூவாத்தூரில் பலத்த லாபம் பெற்ற அவர், அதிமுக இரண்டான பிறகு அங்கும், இங்குமாக அலைந்தவர், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தும், சில நேரங்களில் அவரை எதிர்த்தும் வசைபாடி வந்தார். திமுக நடத்திய மாதிரி சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் கலந்து கொண்டார்.

தேர்தல் அறிவித்தவுடன் சசிகலாவுடன் செல்வதாகவும், திடீரென திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து அங்கு சீட் கிடைக்கவில்லை என்றவுடன் அன்று மாலையே திமுகவுக்கு தெரிவித்த ஆதரவை திரும்பவும் பெற்றுக் கொண்டார். தற்போது எங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ள அவர் தேர்தலிலும் போட்டியிடவில்லை. இந்நிலையில், சிவகங்கைக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுப்புக் கொடி காட்டியதால்  வீட்டுக் காவலில் கைது செய்யப்பட்டார் கருணாஸ். தற்போது தனித்து விடப்பட்ட கருணாஸ் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க அவரது ஆதரவாளர்கள், லோக்கல் தொகுதி திமுகவினரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.  

இந்நிலையில் முக்குலத்தோர் சமுதாயத்தை அடகு வைத்து முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள்பண வசூலில் ஈடுபடுவதாக புகார்கள் நாலாபுறமும் எழுந்துள்ளது. இந்நிலையில்,  முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான பெரிய கருப்பனிடம் ரூ 10 லட்ச ரூபாய் கையூட்டு வேலை செய்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து தேவரின நலச்சங்க தலைவர் அருண் கதிரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த வெள்ளைச்சாமி திருப்பத்தூர் திமுக வேட்பாளர் பெரியகருப்பணிடம் ரூ 10 லட்சம் வாங்கிக் கொண்டு அவருக்கு ஆதரவாக செயல்படுகிறார். 

இனத் துரோகியாக செயல்படும் இவரை முக்குலத்தோர்கள் யாரும் நம்ப வேண்டாம். இவரைப் பின் தொடர வேண்டாம். மற்ற தொகுதிகளில் அதிமுக நிற்கிறது. அங்கே சென்று அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று இவர் சொல்வாரா?  கோபாலகிருஷ்ணன் மதுரை தெற்கில் நிற்கிறார். அங்கே போய் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்வாரா?  சமுதாய ரீதியிலாக காட்டிக் கொடுக்கும் இவர்கள், எதிர் சமுதாயத்தினரான பெரியகருப்பன் போன்ற ஆட்களை வைத்து வெற்றி பெற வைக்க துடிக்கிறார்கள். 

முக்குலத்தோர் சார்பில் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்காமல் மாற்று சாதியினரான பெரியகருப்பன் போன்றோரிடம் காசை வாங்கிக்கொண்டு, சமுதாயத்தை காட்டிக்கொடுக்கும் கைக்கூலி வெள்ளைச்சாமி போன்றவர்களை முக்குலத்தோர் சமுதாயம் தவிர்க்க வேண்டும். கருணாஸ் அவர்களே உடனே உங்கள் கட்சியில் இருந்து வெள்ளைச்சாமி நீக்க வேண்டும்’’எனக் கேட்டுக் கொண்டுள்ளார் அருண் கதிரேசன்

click me!