ஒய்எம்சிஏ மைதானத்தில் அறிவாலயம் அமைக்கும் திமுக... கருணாநிதி சிலை திறப்பு விழா பிரம்மாண்ட ஏற்பாடு!

By vinoth kumarFirst Published Dec 14, 2018, 10:14 AM IST
Highlights

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான பிரமாண்ட விழா மேடை தயாராகி கொண்டிருக்கிறது. 

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான பிரமாண்ட விழா மேடை தயாராகி கொண்டிருக்கிறது.  

இதுகுறித்து திமுக தலைமை விடுத்துள்ள அறிக்கை;- கருணாநிதியின் திருவுருவச் சிலை வரும் 16ம்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் க.அன்பழகன் முன்னிலையில், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார். இதை முன்னிட்டு இடவசதி மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில், சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ள முன்னணியினர் மட்டுமே, அண்ணா அறிவாலய வளாகத்தில் நடைபெற உள்ள சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கருணாநிதி சிலை திறப்பு விழா, பொதுக்கூட்டம் நடைபெறும் ராயப்பேட்டை, ஒய்எம்சிஏ திடலில் நேரடி ஒளிபரப்பு செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் சிலை திறந்து வைத்தவுடன், சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் வாழ்த்துரை வழங்க உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர்  நாராயணசாமி ஆகியோர் நேரடியாக பொதுக்கூட்டம் நடைபெறும் திடலுக்கு வருகை தந்தவுடன், பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்கும். எனவே, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தருவதை தவிர்த்து, பொதுக்கூட்டம் நடைபெறும் ஒய்எம்சிஏ திடலுக்கு வருகைதர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது. 

ராயப்பேட்டையில் சோனியா காந்தி பேசும் பொதுக்கூட்ட மேடை அண்ணா அறிவாலய வடிவமைப்பில் தயாராகி வருகிறது. தென் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ மேடை அமைக்கும் பணியை கவனித்து வருகிறார். இந்த மேடை வெளியில் தயாரிக்கப்பட்டு ராயப்பேட்டை மைதானத்திற்கு கொண்டு வரப்படுகிறது. 

click me!