வாய் சவடாலை விட்டுவிட்டு.... தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியிலே முதல்ல ஜெயிச்சிட்டு வாங்க... தமிழிசையை தாறுமாறு பண்ணிய கனிமொழி..!

Published : Aug 10, 2019, 12:06 PM IST
வாய் சவடாலை விட்டுவிட்டு.... தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியிலே முதல்ல ஜெயிச்சிட்டு வாங்க... தமிழிசையை தாறுமாறு பண்ணிய கனிமொழி..!

சுருக்கம்

திமுக எம்.பி.கனிமொழி கூறுகையில் முதலில் தமிழகத்தில் பாஜக ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டு பேசுங்கள் என்றார். எனக்கு தெரிந்தவரை திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார். 

தமிழகத்தில் பாஜக ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டு தமிழிசை பேசட்டும் என திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். 

வேலூர் மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை சுமார் 8,141 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது வெற்றியே இல்லை என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வந்தனர். 

வேலூரில் திமுக வெற்றி பெற்றது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த தமிழிசை திமுக பெற்ற வெற்றியை என்னால் ஏற்க முடியாது. இது குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார். எனவே அதிமுக தோல்வி என கூறுவதை ஏற்க முடியாது என விமர்சித்திருந்தார். மேலும், திமுக-காங்கிரஸ் இடையே கருத்து மோதல் நிகழ்ந்து வருவதாகவும் கூறினார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக எம்.பி.கனிமொழி கூறுகையில் முதலில் தமிழகத்தில் பாஜக ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டு பேசுங்கள் என்றார். எனக்கு தெரிந்தவரை திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

திமுகவுக்கு டாடா.. விஜய்யுடன் 'கை' கோர்க்கும் காங்கிரஸ்.. தவெகவுடன் முடிந்த ரகசிய டீல்?
சொந்த வீடும் இல்லை; காரும் இல்லை.. வெறும் ரூ.2,000-ல் வாழ்க்கை நடத்திய ஐயா நல்லகண்ணு.. அரசியலில் ஓர் அதிசயம்!