வீடு திரும்பினார் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனிமொழி..!

By Thiraviaraj RMFirst Published Apr 7, 2021, 3:38 PM IST
Highlights

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அடுத்த 5 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளார் திமுக எம்.பி.கனிமொழி

.

கடந்த சில தினங்களுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் அவர் ஓட்டளிக்க வருவாரா? என கேள்வி எழுந்தது. தகுந்த பாதுகாப்பு உடையணிந்து வந்து வாக்கை பதிவு செய்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்பி கனிமொழி அவர்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று மாலை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து நேராக சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். இந்நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அடுத்த 5 நாட்கள் தன்னை வீட்டில் தனிமை படுத்திக்கொள்ள இருக்கிறார்.

click me!