கள்ளக்குறிச்சியில் கதறி அழும் சுதீஷ் …. ஆப்படிக்கும் அதிமுக !!

By Selvanayagam PFirst Published Apr 5, 2019, 8:14 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் சுதீசுக்கு அதிமுகவினர் போதுமான ஆதரவு தரவில்லை என்றும், தொகுதியில் வேலை பார்ப்பதற்கு கூட அதிமுகவினர் வருவதில்லை என்றும் தேமுதிகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக வேட்பாளராக களமிறக்கப்பட்டிருப்பவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ்.  இவருக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் , பிரேமலதா  உள்ளிட்டோர் மிகக் கடுமையாக பிரச்சாரம் செய்தாலும் சுதீஷ் தற்போது வரை நொந்து போயிருக்கிறார்.
கள்ளக்குறிச்சித் தொகுதியில் எங்கு பார்த்தாலும் உதயசூரியன் சின்னம் தான். பொன்முடியின்  மகன் கவுதம சிகாமணியின் ஹை-டெக் பிரச்சாரத்தைக் கண்டு தேமுதிக மற்றும் அதிமுகவினர் அதிர்ந்து போயுள்ளனர்.

ஆனால் தேமுதிகவின் முரசு சின்னத்தை எங்க தேடிப்பார்த்தாலும் காணவில்லை என்றே சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல் சுதீசுக்கு ஆதரவாக அதிமுகவினர் எந்தவிதத்திலும் ஒத்துழைப்பி தருவதில்லை என கூறப்படுகிறது.

இதனால் நொந்துபோன் சுதீஷ் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து அமைச்சர் சி.வி.சண்முகத்தை தொடர்பு கொண்ட  இபிஎஸ்,  ‘உங்களுக்கு யாரு மேல என்ன வருத்தம் இருந்தாலும் நம்ம கூட்டணி ஜெயிக்க வேண்டும் என நீங்க உழைக்கணும்.சுவர்ல ஒரு சின்னம் கூட வரையலை என்று புகார் வருது. பார்த்துக்கோங்க.' என்று சொல்லியிருக்கிறார். 

அன்று இரவு கள்ளக்குறிச்சியில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இதைப் பற்றி பேசிய சி.வி.சண்முகம். ‘சின்னம் வரையலைனு புகார் சொல்றாங்களாம். அடுத்த வாரம் நான் வர்றதுக்குள்ள பெயிண்ட்ல வரையலைன்னா கூட பரவாயில்லை கரியிலாவது வரைஞ்சிருக்கணும் என சற்று கிண்டலாக பேசியுள்ளார்.

இது குறித்து கேள்விப்பட்ட முதலமைச்சர், தன்னுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான ஆத்தூர் இளங்கோவனிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து . கள்ளக்குறிச்சி தொகுதியை முழுக்க முழுக்க  தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார்.ஆத்தூர் இளங்கோவன்.


இதில் கடுப்பான சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் தற்போது சற்று அடக்கி வாசிக்கத் தொடங்கியுள்ளனர். அதாவது சைலண்ட் ஆகிவிட்டனர். இப்படி இரு பக்கமும் இடி வாங்கிக் கொண்டு நொந்து கிடக்கிறார் சுதீஷ்.

click me!