"கலைஞர் இஸ் பேக்" மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்தார் கருணாநிதி!

First Published Aug 2, 2018, 12:27 PM IST
Highlights
Kalaignar karunanidhi is back to normal


காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்தால் அவர் நாற்காலில் அமரவைக்கப்பட்டார். அவரது உடல் நிலை பற்றி கவலை அடைந்த தொண்டர்கள் ஆஸ்பத்திரி முன் 6நாட்களாக விடிய விடிய காத்து கிடந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்தோஷத்தில் உள்ளனர்.

கடந்த 27-ந்தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆறு நாட்களாக சிகிச்சை எடுத்துக்கொள்ளும் கருணாநிதி, டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் உடல் நிலை  தேறி வருகிறார்.

கருணாநிதி உடல் நிலை பற்றி விசாரிக்க,  அரசியல் கட்சி தலைவர்கள், துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை பார்த்த படங்கள்  வெளியான பின் பல்வேறுவிதமாக பரவிய வதந்தி நின்றது.

இதனையடுத்து திமுக முன்னாள் மத்திய  அமைச்சர் ஜெகத்ரட்சகன் முயற்சியால் லண்டன் மற்றும் வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற தொற்று நோய் மருத்துவ சிசிச்சை நிபுணர் நேற்று முன்தினம் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடலை பரிசோதித்தார்.

சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ஆவணங்களையும் பார்த்த அவர்கள், அடுத்தகட்ட சிகிச்சையை மேற்கொண்டனர். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் திருப்திகரமாக இருப்பதாகவும் இதுவே அவருக்கு போதுமானது என்றும் தெரிவித்தார். மேலும் தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர். 

இந்நிலையில், தற்போது கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு கருணாநிதி உடல் நிலையில் மேலும் முன்னேற்றமாக அவர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார். முதலில் டாக்டர்கள் அவரை படுக்கையில் சிறிது நேரம் அமரவைத்தனர். பிறகு அருகில் அதன்இருந்த நாற்காலியில் அமரவைத்து சிறிது நேரம் பயிற்சிகள்  கொடுத்துள்ளனர்.

இதுபற்றி ஆஸ்பத்திரி வட்டாரத்தில் கூறும் போது, கருணாநிதி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவரை சிறிது நேரம் நாற்காலியில் அமர வைத்து பயிற்சி அளித்தனர். மருந்துகளை ஏற்றுக் கொண்டு உடல் நிலை ஒத்துழைப்பு அளிக்கிறது என்று தெரிவித்தனர்.

கருணாநிதி செயற்கை சுவாசம் இல்லாமல் தானாகவே சுவாசிக்கிறார். தேவைப்படும் போது மட்டுமே செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. திரவ உணவு குழாய் வழியாக செலுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.

click me!