பயமா இருக்கு... என் உயிருக்கு ஆபத்து... தினகரனை திணறடித்த தீபா!

Published : Aug 04, 2018, 10:34 AM ISTUpdated : Aug 04, 2018, 10:35 AM IST
பயமா இருக்கு... என் உயிருக்கு ஆபத்து...  தினகரனை திணறடித்த தீபா!

சுருக்கம்

சசிகலா கேங்'கால் எனக்கு உயிருக்கு ஆபத்து  ஏற்பட வாய்ப்புள்ளது”  மீண்டும் களத்தில் குதித்த ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

சசிகலா கேங்'கால் எனக்கு உயிருக்கு ஆபத்து  ஏற்பட வாய்ப்புள்ளது”  மீண்டும் களத்தில் குதித்த ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகளான தீபா, ”எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை” என்னும் அமைப்பை ஆரம்பித்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்குச் சென்ற தீபா, தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக மனு அளித்தார்.

அந்த மனுவில், “எனது அத்தையும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து சசிகலாவையும், அவரது உறவினர்களையும் எதிர்த்து குரல் கொடுத்தேன். அவர்கள் மீது போலீசில் புகாரும் செய்தேன். இதனால் சசிகலா தரப்பில் இருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் எனக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கியது.

அவர்களது தூண்டுதலின் பேரில் சிலர் நள்ளிரவு நேரங்களில் என் வீட்டின் வளாகத்தில் நுழைந்து இடையூறுகள் செய்தனர். தொடர்ந்து பல வழிகளில் மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.எனக்கோ, என் கணவர் மாதவனின் உயிருக்கோ, உடமைக்கோ ஏதாவது ஆபத்து நேரிட்டால் சசிகலா குடும்பமே பொறுப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தனக்கும், தனது கணவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், ”அரசியலில் எனது பெயரை கெடுக்கவும், எனது அரசியல் பணிகளை தடுக்கவும் முயற்சித்து வருகிறார்கள். நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது சசிகலா மற்றும் தினகரன் ஆட்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று பயப்படுகிறேன். எனவே தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” என புகாரில் கூறியுள்ளார்.

இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதமும் , சசிகலா, தினகரன் ஆட்கள் தன்னை மிரட்டுவதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தீபா புகார் அளித்திருந்தார் என்பது குருப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!