
முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் குணமாக வேண்டும் என லட்சக்கணக்கானோர் இன்று தமிழகம் முழுவதும், பல்வேறு கோயில்களில் யாகம், பரிகாரம், பூஜைகள் நடத்தி பிரார்த்தனைகள் செய்கின்றனர்.
கடந்த 1984ம் ஆண்டு, முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். உடல் நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு பூரண குணமாக வேண்டும் என, ராஜ்யசபா எம்பியாக இருந்த ஜெயலலிதா, காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் யாகம் நடத்தினார்.