ஜெ. 69வது பிறந்தநாள் - தலைமை அலுவலகத்தில் மலர் தூவி மரியாதை

Asianet News Tamil  
Published : Feb 24, 2017, 10:31 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
ஜெ. 69வது பிறந்தநாள் - தலைமை அலுவலகத்தில் மலர் தூவி மரியாதை

சுருக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுக சார்பில் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளையொட்டி, இன்று சென்னை அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் இ.பி.எஸ். தொடங்கி வைத்தார்.

இதைதொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதா  உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செய்தார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் மலர் அலங்காரத்துடன் வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு அதிமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அவைத் தலைவர் செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி விழா மலர் வெளியிடப்பட்டது. திண்டுக்கல் சீனிவாசன் விழா மலரை வெளியிட, பொள்ளாச்சி ஜெயராமன்  அதனை பெற்று கொண்டார்.

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!