விசாரணை ஆணையத்தில் மட்டுமே தெரிவிப்பேன் - அடம்பிடிக்கும் ஜெயக்குமார்...

 
Published : Sep 29, 2017, 09:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
விசாரணை ஆணையத்தில் மட்டுமே தெரிவிப்பேன் - அடம்பிடிக்கும் ஜெயக்குமார்...

சுருக்கம்

jayakkumar said i will tell only investigation commission

ஜெயலலிதாவை யார் யார் பார்த்தார்கள் என்று அவர்களுக்குத்தான் தெரியும் எனவும் மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்தேனா என்பது குறித்து விசாரணை ஆணையத்தில் மட்டுமே தெரிவிப்பேன் எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் வெகுநாட்களாகவே ஒரு புதிராக இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது நாங்கள் யாரும் பார்க்கவில்லை எனவும் சசிகலா தரப்பு என்ன கூறியதோ அதையே மக்களிடம் தெரிவித்தோம் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், அளித்த பேட்டியில், எந்த அமைச்சர்களும் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்கவில்லை எனவும் ஆளுநர் வந்து பார்க்கும் போது கூட ஜெயலலிதாவுக்கு சுயநினைவு இல்லை எனவும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஜெயலலிதாவை யார் யார் பார்த்தார்கள் என்று அவர்களுக்குத்தான் தெரியும் எனவும் மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்தேனா என்பது குறித்து விசாரணை ஆணையத்தில் மட்டுமே தெரிவிப்பேன் எனவும் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!
அன்புமணிக்கு பாமகவில் ஒரு துளியும் உரிமை இல்லை..! நோட்டீஸ் விட்ட ராமதாஸ்..!