கரூரில் தொடரும் அதிரடி ரெய்டு! பதற்றத்தில் Ex. அமைச்சர்!

Asianet News Tamil  
Published : Sep 23, 2017, 10:48 AM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
கரூரில் தொடரும் அதிரடி ரெய்டு! பதற்றத்தில் Ex. அமைச்சர்!

சுருக்கம்

IT raid in Karur

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர்  சோதனை மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 

செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக கூறி, பாலரிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு பணம் வாங்கியுள்ளார்.  பணம் கொடுத்தவர்கள் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனையை நேற்று துவங்கியது. இந்த சோதனையின்போது, ஒரு கோடி ரூபாய் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

கரூரில் உள்ள ராமகிருஷ்ணா நகர், தான்தோன்றி மலை, ராம் நகர் உள்ளிட்ட 10 இடங்களில் 13 குழுக்களாக பிரிந்து அதிகாரிகள் இந்த சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை சோதனை இன்றும் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

PREV
click me!

Recommended Stories

காங்கிரசை 'கை' கழுவிய மூத்த தலைவர்.. அடுத்த விக்கெட் காலி.. செல்வபெருந்தகை மீது பகீர் புகார்!
கொங்குவை தொடர்ந்து 'டெல்டா' பெண்களின் வாக்குகளுக்கு குறி.. திமுகவின் அடுத்த மாஸ்டர் பிளான்!