அடப்போங்கடா... இதெல்லாம் கருத்து கணிப்பா..? கெத்தை விடாத அதிமுக..!

By Thiraviaraj RMFirst Published Apr 30, 2021, 5:09 PM IST
Highlights

தமிழகத்தில் திமுக பத்தாண்டுகள் கழித்து வெற்றி பெறும் என பல கருத்து ‘கணிப்பு’ நிறுவனங்கள் கூறியிருந்தன. 
 

தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்பு எந்த காலத்திலும் எடுபடாது. அதிமுக மீண்டும் ஆட்சியை அமைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

நாளை மறுநாள் தேர்தல் ரிசல்ட் வர உள்ளது. இந்நிலையில் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில், எக்ஸிட் போல் நிலவரம் நேற்று மாலை வெளியானது. அதில், தமிழகத்தில் திமுக பத்தாண்டுகள் கழித்து வெற்றி பெறும் என பல கருத்து ‘கணிப்பு’ நிறுவனங்கள் கூறியிருந்தன. 

இந்நிலையில், சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘’கருத்து கணிப்பு என்பது எந்த காலத்திலும் எடுபடாத ஒன்று. அதிமுக, மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்.

200 பேரிடம் கருத்துக்களை கேட்டுவிட்டு, கருத்து கணிப்பு வெளியிடப்படுகிறது. எனவே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, பொதுமக்கள் மகிழ்ச்சி பெறும் வகையில் அதிமுக மீண்டும் ஆட்சியை அமைக்கும். 

தபால் வாக்குகளில் கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதையே தான் பின்பற்ற வேண்டும் என்றும், தபால் வாக்குகளை முதலில் தான் என்ன வேண்டும் எனவும், ஏற்கனவே பின்பற்ற நடைமுறை தான் வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

click me!