எஸ்பி.பி பற்றி சுவராஸ்மான தகவல்கள்.! கல்லூரி கனவு, காதல் திருமணம், விருதுகள், கின்னஸ் சாதனையை எட்டியது எப்படி.

By T BalamurukanFirst Published Aug 18, 2020, 10:23 PM IST
Highlights

அந்த பாடகரின் குரல் முடங்கிப்போய் வெண்டிலேட்டர் இயக்கிக்கொண்டிருக்கிறது.நாடே அவர் பரிபூரணமாகி எழுந்து மீண்டும் பாடல்களை பாடவேண்டும் என பூரண நலமடைய உலகம் முழுவதிலிருந்து பிரார்த்தனைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் கவலைக்கிடமான நிலைக்கு போய் கொண்டிருக்கிறார் எஸ்பிபி.
 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எஸ்பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள் பலரது காயம்பட்ட மனத்திற்கு மருந்து தடவியது.ஆனால் அந்த பாடகரின் குரல் முடங்கிப்போய் வெண்டிலேட்டர் இயக்கிக்கொண்டிருக்கிறது.நாடே அவர் பரிபூரணமாகி எழுந்து மீண்டும் பாடல்களை பாடவேண்டும் என பூரண நலமடைய உலகம் முழுவதிலிருந்து பிரார்த்தனைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் கவலைக்கிடமான நிலைக்கு போய் கொண்டிருக்கிறார் எஸ்பிபி.

யார் இந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.

ஆந்திரமாநிலம் நெல்லூர் மாவட்டம் கொணடம்பேட்டை ஊரில் எஸ்.பி.சம்பமூர்த்தி-சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் எஸ்பி.பாலசுப்பிரமணியம்.

இவருடைய தந்தை எஸ்.பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர். தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் பொழுது அதைக்கவனித்து இசைக்கருவிகளான ஹார்மோனியம் புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகளை இசைக்க கற்றுக்கொண்டவர் தான் எஸ்பிபி.தன் மகன் இன்ஜினியராக வேண்டும் என கனவு கண்ட சம்பமூர்த்தி  ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.கல்லூரி சென்றவர் வாழ்க்கையில் டைப்பாய்டு காய்ச்சல் வந்து கெடுத்துவிட்டது.காய்ச்சலுக்கு தெரிந்திருந்தது எஸ்பிபி இன்ஜினியர் அல்ல உலகத்தையே கட்டிப்போடும் குரலுக்கு சொந்தக்காரர் என்று. அந்த குரலுக்கு எத்தனை எத்தனை விருதுகள் கிடைத்திருக்கிறது.

 பாடகனாக வேண்டும் என்பது தான் எஸ்பிபி யின் ஆசை. ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோதன் மகன் இன்ஜினியர் ஆகவேண்டும் என்று உறுதியாக இருந்தார்.கல்லூரியில்படிக்கும் போதே பல இசைபோட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் தட்டிச்சென்றவர் இவர்.1964 ஆம்ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னையை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ்.பிபி முதல்பரிசு பெற்றார்.ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார். இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவர்.இவர்களோடு சேர்ந்து எஸ்.பி.பி இசை நிகழ்ச்சிகளையும் நாடககச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ்.பி.பிக்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய "நிலவே என்னிடம் நெருங்காதே" என்ற பாடலாகும். "ஹோட்டல் ரம்பா" திரைப்படத்தில் மெல்லிசை மன்னர்௭ம்.௭ஸ்.வி இசையில் எல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து "அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு" ௭ன்ற பாடலைப் பாடினார் எஸ்பிபி.௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை. அடுத்ததாக "சாந்தி நிலையம்" படத்தில் வரும் "இயற்கையெனும் இளையகன்னி" என்ற பாடலைப் பாடினார்.ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த "அடிமைப் பெண்" திரைப்படத்தில் பாடிய "ஆயிரம் நிலவே வா" பாடல்வெளிவந்தது.

1966ம் ஆண்டுமுதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்பிபி.இவர் திரைப்படபாடகர் மட்டுமல்லாது  திரைப்பட இசைஅமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக்குரல் தருபவர் எனப் பன்முகஅடையாளம் கொண்டவராக வலம் வந்தார் எஸ்பிபி.

இந்தியஅரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீவிருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன்விருதும் வழங்கியது.
2015ஆம்ஆண்டு சனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்குஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.மதங்களைகடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளதால், 2015ஆம்ஆண்டுக்கான கேரள அரசின் "ஹரிவராசனம்"விருது பெற்றுள்ளார்.2016 ஆம்ஆண்டு 47வது இந்திய சர்வதேசதிரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.

 எஸ்பிபி சாவித்ரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதியருக்கு பிறந்தவர்கள் தான் மகள் பல்லவி மகன் எஸ்பிபி சரண். தென்னிந்தியமொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில்நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு வரலாற்றுக்கு சொந்தக்காரர் எஸ்பி.பாலசுப்பிரமணியம்.இவரது குரல் மீண்டும் ஒலிக்குமா? அனைவரது பிரார்த்தனையில் மீண்டு வருவாரா? எஸ்பிபி.

click me!