வீறு கொண்ட விஷால்...! வெளியிலிருந்தே ஆர்.கே நகர் மக்களுக்கு நல்லது செய்வேன்..!

First Published Dec 7, 2017, 4:06 PM IST
Highlights
i will do all the good thing to rk nagar people from outside itself said vishal


ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட விஷாலுக்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியானது

மொத்தம் 72 போட்டியாளர்களில்,14 பேரின் வேட்பு மனுக்கள் திரும்ப பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது

இதனை தொடர்ந்து, தேர்தல் அலுவலர் வேலுச்சாமியை சந்தித்த  பின்னர்,வெளயொயில் வந்த விஷால்,ஆக்ரோஷமாக செய்தியாளர்களை  சந்தித்து பேசினார்

அப்போது தேர்தலில் நின்று ஜெயிச்சி ஆர்.கே நகர் மக்களுக்கு நல்லது செய்வதை தடுத்து நிறுத்திவிட்டார்கள்...இருந்தாலும் பரவாயில்லை..... வெளியில் இருந்து கூட ஆர்.கே நகர் மக்களுக்கு நல்லது செய்வேன் என  தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டார்

ஆக மொத்தத்தில் இதுவரை விஷாலுக்கு முன்மொழிந்தவர்களான தீபன் சுமதி இவர்கள் இருவரும் இதுவரை எங்கு உள்ளார்கள் என்பது தெரியவில்லை என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பின்,இதனை எதிர்த்து விஷால்  எவ்வளவோ போராடியும், கடைசி வரை வேட்பு மனுவை  ஏற்றுக்கொள்ளவில்லை.

மனுதாக்கல் செய்ததிலிருந்து,வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடும் வரை விஷால் அவருடைய மனு மீது முறையிட்டு போராடியது, அவருடைய நம்பிக்கையை வெளிபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாக உள்ளது என  அவரது ஆதராவாளர்கள் தெரிவித்து உள்ளனர்

click me!