நச்சு நிறைந்த அரசியல் வாழ்க்கைக்கு வந்துவிட்டேன்... வைகோ மகன் பேட்டி..!

By Thiraviaraj RMFirst Published Oct 21, 2021, 3:34 PM IST
Highlights

தொண்டர்களின் நிர்பந்தம், மதிமுகவின் நலனுக்காக நான் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் வந்து விட்டது என்று துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.

தொண்டர்களின் நிர்பந்தம், மதிமுகவின் நலனுக்காக நான் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் வந்து விட்டது என்று துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை நச்சு நிறைந்தது என எனக்குத் தெரியும். பொது வாழ்க்கையில் செயல்படுவதற்கான திறமைகள் எனக்கு இருக்கிறதா என சுய பரிசோதனை செய்திருக்கிறேன். தொண்டர்களின் நிர்பந்தம், மதிமுகவின் நலனுக்காக நான் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் வந்து விட்டது. 

மதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் கட்சிப் பொறுப்புக்கு வந்தேன். மதிமுக தொண்டர்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவர்கள், அவர்கள் அழைப்பை நிராகரிக்க இயலவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

click me!