
இந்திய தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி பதியப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று காலை கொடியேற்றி தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவராக தான் செயல்படுவதாகவும்,துணை தலைவராக பேராசிரியர் ஞானசம்பந்தனையும், பொதுச்செயலாளராக அருணாச்சலத்தையும், பொருளாளராக சுரேஷையும் அறிவித்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறுக்கு நடிகர் கமல் மன்னிப்பு கோரியுள்ளார்.
முழக்கங்களை எழுப்ப லிஸ்ட்
இதற்கு முன்னதாக,கூட்டத்தில் தொண்டர்கள் எப்படி எல்லாம் முழக்கங்களை எழுப்ப வேண்டும் என்றும், அதற்கான ஒரு லிஸ்ட் போட்டு முன்னதாகவே கொடுக்கப்பட்டு உள்ளது.