கேமரா விலை வெறும் 2500 தான்... பெண்களை நிர்வாணமாக செல்போனில் பார்ப்பேன்! தொழிலதிபரின் கன்னிவேட்டை

By sathish kFirst Published Dec 6, 2018, 6:50 PM IST
Highlights

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள மகளிர் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த விடுதியின் உரிமையாளரைக் கைது செய்துள்ளனர் போலீசார்.
 

மூன்று மாதங்களுக்கு முன்னர், சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் தில்லை கங்காநகர் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் மகளிர் தங்கும் விடுதியைத் தொடங்கினார். மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் சிலர், இங்கு மாத வாடகையில் அறை எடுத்துத் தங்கியிருந்தனர். சில நாட்களுக்கு முன்னர் குளியல் அறையில் தண்ணீர் சரியாக வரவில்லை என்று சஞ்சீவியிடம் அவர்கள் கூறியுள்ளனர். உடனே அவர் அதனைச் சரி செய்து தந்துள்ளார். ஆனால், குளியல் அறையில் இருந்த ஷவர், ஸ்விட்ச் போர்டு ஆகியன கழற்றப்பட்டு இருந்ததைக் கண்ட அப்பெண்களுக்கு, அங்கு ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, ஹிடன் கேமரா டிடெக்டர் செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து சோதித்துப் பார்த்தனர். குளியல் அறை மட்டுமல்லாமல், படுக்கையறையில் இருந்த எல்இடி விளக்குகள், அழைப்பு மணி ஆகியவற்றில் ரகசிய கேமராக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது பற்றி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த விடுதியில் தங்கியிருந்த பெண்கள் புகார் அளித்தனர். இதையடுத்து  அதிரடி சோதனை நடத்திய போலீசார், வயர்லெஸ் முறையில் இயக்கப்பட்ட ரகசிய கேமராக்களை உடனடியாக அகற்றினர். செல்போன்கள், எலக்ட்ரானிக் சாதனங்களைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து உடனடியாக விடுதியை நடத்திவந்த சஞ்சீவ் கைது செய்யப்பட்டார்.

சஞ்சீவ், தனது குடும்பத்தினருடன் தாம்பரத்தில் இருந்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளைச் சரளமாகப் பேசுவார் என்று கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இளம் பெண்களுக்கான தங்கும் விடுதி உள்ளதாக இவர் விளம்பரம் செய்துள்ளார். பரங்கிமலை ரயில் நிலையம் அருகே விடுதி இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்ததால், பெண்கள் இங்குவந்து தங்கியுள்ளனர். தற்போது அந்த பெண்கள் வேறு விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

போலீசாரிடம் சம்பத்ராஜ், அளித்த வாக்குமூலம் ; ஆதம்பாக்கத்தில் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை மாதம் ரூ.24 ஆயிரத்துக்கு வாடகைக்கு எடுத்தேன். என்னுடைய குழந்தைகளுக்கு ஆதம்பாக்கத்தில் உள்ள பிரபல பள்ளியில் படிக்க இடம் கிடைக்காததால், அஸ்தினாபுரத்துக்கு சென்றேன். இதனால் ஆதம்பாக்கம் வீட்டை வேலைக்கு செல்லும் பெண்களுக்கான தங்கும் விடுதியாக மாற்ற திட்டமிட்டேன். இதுபற்றி ஆன்லைனில் விளம்பரம் செய்தேன். அதை பார்த்து 6 பெண்கள் வந்தனர். அவர்களிடம் மாதம் தலா ரூ.7 ஆயிரம் வாடகை பெற்றேன். இங்குள்ள பெண்கள் அனைவரும் பகலில் வேலைக்கு சென்று விடுவதால், விடுதியில் பகல் நேரத்தில் எனது கட்டுமான நிறுவனத்தின் அலுவலகமாக பயன்படுத்தி வந்தேன்.

ஏற்கனவே கட்டுமான நிறுவனம் நடத்தியபோது என்னிடம் வேலைக்கு வந்த 30-க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுடன் உல்லாசமாக இருந்தேன். அதை வீடியோவாக பதிவு செய்து வைத்து உள்ளேன். அதன் பிறகு விடுதியில் தங்கி உள்ள பெண்கள் மீதும் எனக்கு ஆசை ஏற்பட்டது. அவர்களை எப்படி எனது ஆசைக்கு இணங்க செய்வது? என்று திட்டமிட்டேன். அப்போது ரகசிய கேமராக்கள் மூலமாக அவர்கள் குளியல் அறை மற்றும் படுக்கை அறைகளில் அரைகுறை ஆடைகளில் இருப்பதை படம்பிடித்து, அதை காட்டி அவர்களை மிரட்டி உல்லாசமாக இருக்கலாம் என்று திட்டமிட்டேன். இதற்காக ‘ஆன்லைனில்’ விற்பனை செய்யப்பட்ட ‘வை-பை’ மூலம் இயங்கக்கூடிய 9 நவீன ரக சிறிய கேமராக்களை வாங்கினேன்.

உளவுத்துறையினர் பயன்படுத்தும் இந்த கேமராக்கள் ஒவ்வொன்றும் ரூ.2 ஆயிரத்து 500 ஆகும். இந்த கேமராக்களை ‘வை-பை’ மூலமாக இயக்கி ஆபாச காட்சிகளை பார்க்கலாம். இந்த கேமரா, ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டால் மட்டுமே பதிவு செய்யும். மற்ற நேரங்களில் இயங்காது. பகலில் பெண்கள் அனைவரும் வேலைக்கு சென்றபிறகு நானே, குளியல் அறைகள், படுக்கை அறைகளில் கேமராக்களை ரகசியமாக பொருத்தினேன். அதில் பதிவாகும் காட்சிகளை வை-பை மூலமாக செல்போனில் வைத்து பார்க்கலாம் என ஆசைப்பட்டேன். ஆனால் அதற்குள் போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன் இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
 

click me!