குட்கா புகழ் விஜய பாஸ்கர் ! தேர்தல் பிரச்சாரத்தின் போது இப்படி வெளிப்படையாக பேசி பல்பு வாங்கிய அரசியல்வாதி !!

By Selvanayagam PFirst Published Apr 5, 2019, 8:08 AM IST
Highlights

புதுக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய தேமுதிக பொருளாளார் பிரேமலதா விஜயகாந்த், சுகாரதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் குறித்து பேசும்போது குட்கா புகழ் விஜய பாஸ்கர் என கூறி தொண்டர்களை அதிர்ச்சி அடையச் செய்தார்.

திருச்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு பேசினார். 

அப்போது மாநில அரசும், மத்திய அரசும் இந்த கூட்டணியில்தான் உள்ளது. உள்ளாட்சி தேர்தல் மற்றும் வருகிற அனைத்து தேர்தல்களிலும் இந்த கூட்டணியே தொடரும். இந்த கூட்டணி மக்களுக்கு என்னென்ன செய்யும் என்று வாக்குறுதி அளித்து வருகிறது. 

ஆனால், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் எப்போதும் குறை சொல்வதையே வழக்கமாக கொண்டு உள்ளார். இதனால் தான் அவரை ஒட்டு மொத்த தமிழக மக்களும் புறக்கணித்து உள்ளனர். இந்த கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் மோடி தான் என்று சொல்லி வாக்கு சேகரிக்கிறோம். ஆனால் அந்த கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அவர்களால் உறுதியாக கூறமுடியுமா?.

சாதிக்பாட்ஷா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் யார் என்று ஸ்டாலின் தெளிவான பதில் கூறிவிட்டு, கோடநாடு குறித்து அவர் பேசட்டும். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஊழல் செய்வதிலும், ஏமாற்றுவதிலும் தான் வலிமையான கூட்டணி என தெரிவித்தார்.

அது மக்களை ஏமாற்றும் கூட்டணி. எங்கள் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. எதிர்த்து போட்டியிடுவோரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்றும் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து வருவதாக பாராட்டிப் பேசினார். அப்போது அமைச்சர் விஜய பாஸ்கர் பெயரைக் குறிப்பிடும்போது குட்கா புகழ் விஜய பாஸ்கர் என தெரிவித்தார்.

இதனால் அங்கு குழுமியிருந்த அதிமுக மற்றும் தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

click me!