கவர்னரையே மெர்சலாக்கிட்டாங்கப்பா நம்பாளுங்க….என்ன நடந்துச்சுன்னு பாருங்க!!

 
Published : Mar 05, 2018, 10:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
கவர்னரையே மெர்சலாக்கிட்டாங்கப்பா நம்பாளுங்க….என்ன நடந்துச்சுன்னு பாருங்க!!

சுருக்கம்

governer Kalyan singh blood test in rajastan hospital

ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங்கிற்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதாக அம்மாநில அரசு மருத்துமனை தவறான மருத்துவ அறிக்கை தந்ததுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும்  சிகிச்சைகளும், பரிசோதனை முடிவுகளும் ஏனோதானோ என்றுதான் இருக்கும் என்பதை ராஜஸ்தான் அரசு மருத்துவமனை ஊழியர்கள் இன்று நிரூபித்துள்ளனர்.  ‘

ராஜஸ்தான் மாநில கவர்னர் கல்யான் சிங்  அண்மையில்  உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஜெய்ப்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவருக்கு இரத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

இதில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவில் தெரியவந்தது. பின்னர், தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில் செய்த பரிசோதனைகளில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று ஏதுமில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தனக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக தவறான பரிசோதனை முடிவு தந்த அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது உயர்மட்ட விசாரணை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் கல்யான் சிங் இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஒரு மாநிலத்தின் ஆளுநரையே அரசு மருத்துவமனை ஊழியர்கள் மெர்சலாக்கியுள்ள நிகழ்வு இந்தியாவையே கிடுகிடுக்க வைத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!