”பணம் சம்பாதிக்க ரஜினி அரசியலுக்கு வரவில்லை” - உரக்க சொல்லும் தமிழருவி மணியன்

 
Published : Aug 09, 2017, 12:27 PM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
”பணம் சம்பாதிக்க ரஜினி அரசியலுக்கு வரவில்லை” - உரக்க சொல்லும் தமிழருவி மணியன்

சுருக்கம்

Gandhian people organizer Tamilnadhi Maniani said that giving the people an open and unhygienic rulership in politics

அரசியலில் ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை மக்களுக்கு தருவது, தென்னக நதிகளை இணைப்பது குறித்த நடிகர் ரஜினிகாந்தின் உறுதி மொழிகளில் முக்கிய இடம் பிடிக்கும் என்று காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், நிச்சயமாக அரசியலுக்கு வருவார் என்றும், ஆட்சியைப் பிடிப்பார் என்றும் காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. அரசியலுக்கு வர வேண்டும் என்று சிலரும், அரசியலுக்கு வர வேண்டாம் என்று சிலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது, சந்தேகத்துக்கிடமின்றி நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்குவார் என்றும், எந்த சந்தேகமும் இல்லாமல் ரஜினி, ஆட்சியைக் கைப்பற்றுவார் என்றும் தமிழருவி மணியன் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் நுழைவது மக்களுக்கு சேவையாற்றவே தவிர, பணம் சம்பாதிக்க அல்ல என்று என்னிடம் பலமுறை கூறியுள்ளதாக தமிழருவி மணியன் தெரிவித்தார். 

கோதாவரி மற்றும் காவிரி நதிகளை இணைப்பது, ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி தருவது உள்ளிட்டவை அவரது உறுதிமொழிகளில் முக்கிய இடம்பிடிக்கும் என்றும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..