போலீஸிடம் சண்டையிட்ட காந்தி அழகிரி!! யாருக்காகனு படிங்க இங்கே..

First Published Jul 30, 2018, 11:43 AM IST
Highlights
gandhi azhagiri fight with police in kauvery hospital


திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் திமுக தொண்டர்கள் அங்கு பெருமளவில் திரண்டுள்ளனர். 

நேற்றிரவு அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் தொடர் சிகிச்சையின் விளைவாக அவரது உடல்நிலை சீராகிவருவதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. உடல்நிலையில் பின்னடைவு என்றதும் மனமுடைந்த தொண்டர்கள், சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை சீரடைந்தது என்றதும் சற்று ஆறுதல் அடைந்தனர். விடிய விடிய காத்திருந்த தொண்டர்கள், அதிகாலையில் சற்று கலைந்து சென்றனர். மீண்டும் காலை முதல் ஏராளமானோர் திரண்டுள்ளனர். 

இன்று காலை முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றனர். 

இதற்கிடையே அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றனர். அழகிரியின் தீவிர ஆதரவாளரும் அவருக்கு மிகவும் நெருக்கமானவருமான மன்னனை மருத்துவமனைக்குள் போலீஸார் அனுமதிக்கவில்லை. அதனால் அதிருப்தியடைந்த காந்தி அழகிரி, மருத்துவமனையில் இருந்து மீண்டும் வெளியே வந்து போலீஸாரிடம் சண்டையிட்டு மன்னனை மருத்துவமனைக்குள் அழைத்து சென்றார். 
 

click me!