திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி காலமானார்...!

Published : Feb 27, 2020, 08:07 AM IST
திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி காலமானார்...!

சுருக்கம்

 57 வயதான கே.பி.பி.சாமி அண்மைக்காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

சென்னை திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவால் காலமானார். 57 வயதான கே.பி.பி.சாமி அண்மைக்காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை திருவொற்றியூர் கே.வி.கே. குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

கே.பி.பி. சாமி அவர்கள்  2011ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி செய்த போது,  மீன்வளத்துளை அமைச்சராக இருந்தார். இவர் திமுக மீனவரணி செயலாளராகவும் பதவி வகித்தவர். மீனவ சமுதாயத்தை சேர்ந்தவரான கே.பி.பி. சாமி மீனவர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!