நிர்வாணமாக அடுத்தவர் வீட்டுக்குள் நுழைந்த மாஜி அதிமுக எம்.பி.. கும்மியெடுத்த வீட்டு உரிமையாளர்..!

By Asianet TamilFirst Published Nov 5, 2021, 10:58 PM IST
Highlights

சாதாரணமாக நுழைந்திருந்தால்கூட பரவாயில்லை. உடம்பில் துணியின்றி நிர்வாணமாக இன்னொரு வீட்டுக்குள் புகுந்து பீதியைக் கிளப்பியிருக்கிறார். கோபாலகிருஷ்ணனை அந்தக் கோலத்தில் கண்ட அந்த வீட்டுப் பெண்கள் அலறியிருக்கிறார்கள். 

குன்னூரில் குடிபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் நிர்வாணமாக புகுந்த அதிமுக முன்னாள் எம்.பி. தாக்கப்பட்டார். 

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(56). குன்னூர் நகராட்சித் தலைவராக இவர் இருந்திருக்கிறார். கடந்த  கடந்த 2014-ஆம் ஆண்டில் அதிமுக 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டப்போது, இவருக்கு நீலகிரி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று 2019-ஆம் ஆண்டு வரை நீலகிரி அதிமுக எம்.பி.யாக இருந்தார். எம்.பி.யாக இருந்தபோது போலீஸ் ஒருவரை மிரட்டி பேசிய காணொலி வெளியாகி சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் தீபாவளி முந்தைய நாள் இரவில் நன்றாக மது அருந்தியிருந்ததால் கோபாலகிருஷ்ணன் போதையில் இருந்தார். குடிபோதையில்  இரவு 10 மணிக்கு மேல் ஓட்டுப்பட்டறை அருகே முத்தாளம்மன் பேட்டை குடியிருப்பு பகுதிக்குச் சென்றார். அங்கு கோபி(47) என்பவரது வீட்டுக்குள் நுழைந்தார் கோபாலகிருஷ்ணன். அவர் சாதாரணமாக நுழைந்திருந்தால்கூட பரவாயில்லை. உடம்பில் துணியின்றி நிர்வாணமாக இன்னொரு வீட்டுக்குள் புகுந்து பீதியைக் கிளப்பியிருக்கிறார். கோபாலகிருஷ்ணனை அந்தக் கோலத்தில் கண்ட அந்த வீட்டுப் பெண்கள் அலறியிருக்கிறார்கள். 

இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த கோபிக்கும் கோபாலகிருஷ்ணனுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது. வாய் வார்த்தை முற்றி அது கைகலப்பில் முடிந்திருக்கிறது. அப்போது கோபாலகிருஷ்ணனை கோபி தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் நிர்வாணமாக இருந்த கோபாலகிருஷ்ணனை கோபி மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். இந்த விஷயம் பிரச்னையாகிவிடும் என்பதை உணர்ந்த கோபாலகிருஷ்ணன், தாக்குதலில் காயம் அடைந்ததாகக் கூறி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கோபாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக சேர்ந்துவிட்டார்.

இந்நிலையில் வீட்டுக்குள் நிர்வாணமாக நுழைந்து தகறாரில் ஈடுபட்ட கோபாலகிருஷ்ணன் மீது கோபி குன்னூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல தன்னை தாக்கியதாக கோபி மீது கோபாலகிருஷ்ணனும் புகார் அளித்திருக்கிறார். இதனால் அவர்கள் இருவர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இந்த நிர்வாண சம்பவம் குன்னூரிலும் அதிமுகவினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!