சேலத்தில் அதிர்ச்சி... அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மோதி விபத்து.. பெண் போலீஸ் படுகாயம்..!

By vinoth kumarFirst Published Jul 29, 2021, 10:24 PM IST
Highlights

பெண் காவலர் மீது காரில் வந்து மோதிய மாஜி அதிமுக எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெண் காவலர் மீது காரில் வந்து மோதிய மாஜி அதிமுக எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் ஆத்தூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சின்னதம்பி(58). நேற்று தனது காரில் ரயிலடி தெருவிற்கு கருமந்துறை காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் பிரேமலதா(28) இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, ரயில் நிலையத்தின் எதிரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்வதற்காக திரும்பி சென்றபோது ரயிலடி தெருவின் நுழைவு பகுதியில் பெண் காவலர் பிரேமலதா மீது மாஜி எம்எல்ஏ சின்னதம்பி கார் மோதியது.

இதில், காரின் சக்கரத்தில் பிரேமலதாவின் இருசக்கர வாகனம் சிக்கிக்கொண்டது. கீழே விழுந்த அவர் படுகாயடைந்தார். உடனே அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி  மீது மாஜி எம்எல்ஏ சின்னதம்பி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விபத்தை எற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!