அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மனைவிக்கு சிறை! சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Asianet News Tamil  
Published : Jun 06, 2018, 12:45 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மனைவிக்கு சிறை! சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுருக்கம்

Former AIADMK minister jailed for five years

 

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் கடலாடி சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதமும் நீதிமன்றம் விதித்துள்ளது.

1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தவர் கடலாடி சத்தியமூர்த்தி. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியின்போது வருவாய் துறை அமைச்சராக சத்தியமூர்த்தி இருந்து வந்தார்.

கடலாடி சத்தியமூர்த்தி அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ரூ.83 லட்சம ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக இழுபறி நலையிலேயே நடந்து வந்தது.

இந்த நிலையில், கடலாடி சத்தியமூர்த்தி வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சத்தியமூர்த்தி மீதான குற்றச்சாட்டு உறுதியான நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோன்று சத்தியமூர்த்தியின் மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது. சத்தியமூர்த்தி மற்றும் அவரது மனைவி சந்திரா இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதமும் உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

தூக்கத்திலும் நடுக்கம்... படுக்கையிலும் குண்டு துளைக்காத ஜாக்கெட் அணியும் பாகிஸ்தான் அசிம் முனீர்..!
உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்காகத்தான்.. மேடையிலேயே கண் கலங்கிய செங்கோட்டையன்..!