ஜம்மு – காஷ்மீர் மக்கள் இப்போது தான் நிம்மதியாக உள்ளனர் !! வெளிநாட்டு தூதர்கள் பாராட்டு !!

Selvanayagam P   | others
Published : Jan 09, 2020, 06:24 PM IST
ஜம்மு – காஷ்மீர் மக்கள் இப்போது தான்  நிம்மதியாக உள்ளனர் !! வெளிநாட்டு தூதர்கள் பாராட்டு !!

சுருக்கம்

ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நிகழ்வதாக  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  அளந்து விடும்  கதையை மக்கள் முற்றிலுமாக நிராகரிப்பதாக வெளிநாட்டு தூதர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது பிரிவின் விதிமுறைகள் ரத்து செய்யப்பட்டு மூன்று மாதங்கள் ஆன நிலையில், ஜம்மு - காஷ்மீர் கள நிலவரம் குறித்து அறிய  16 வெளியாட்டு தூதர்கள் இன்று ஜம்மு – காஷ்மீருக்கு விஜயம் செய்தனர்.

இந்த குழு  ஸ்ரீநகரை சுற்றியுள்ள  பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தது . இந்தக் குழுவில் வெளியுறவுத்துறை  அமைச்சின் மூத்த அதிகாரிகள் இருந்தனர் 

இந்த குழுவில் அமெரிக்கா, வியட்நாம், தென் கொரியா, பிரேசில், உஸ்பெகிஸ்தான், நைர், நைஜிரியா, மொராக்கோ, கயானா,  அர்ஜென்டீனா, பிலிப்பபைன்ஸ்,  நார்வே , பிஜி , தோகா, பங்களா தேஷ், பெரு ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் காஷ்மீர் மாநிலம் முழுவதும் சுற்றிப் பார்த்து கீழ்கண்ட முடிவுகளை எடுத்துள்ளனர். அதில் 

1.    ஜம்மு – காஷமீரில்  வன்முறை நடைபெறுவதாக  பாகிஸ்தான் தவறான  தகவலை மக்கள் முற்றிலும் நிராகரிக்கின்றனர்

2.    ஆகஸ்ட் 5 க்குப் பிறகு  வன்முறை எதுவும்  இல்லாமல் கையாண்டதற்காக மோடி அரசை வெளிநாட்டு தூதுக்குழு பாராட்டியது

3.    அதே நேரத்தில் இங்குள்ள பிரச்சனைகள் முறையாக கையாள வேண்டியது என்பதை அவசியம் என குழு சுட்டிக் காட்டியது.

4.    ஜம்மு – காஷ்மீரில் நடந்த கொலைகளுக்கு பாகிஸ்தானைக் குற்றம் சாட்டியதோடு, அந்நாட்டை இப்பிரச்சனையில் தலையிட வேண்டாம் என்று பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தூதர்களைக் கேட்டுக் கொண்டனர்.

5.    ஜம்மு- காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுக்கு ஒரு அங்குலம் கூட கொடுக்க மாட்டார்கள் என்று தூதர்களிடம்  பொது மக்கள் வலியுறுத்தினர்.
6.    வெளிநாட்டு தூதர்கள் மாநிலம் முழுவதும்  இயல் புநிலையை கண்டறிந்தனர், மேலும் கடைகள் திறந்திருந்தன. போக்குவரத்து  சீராக இருந்தது போன்றவற்றை தூதர்கள் கண்டனர்

ஜம்மு – காஷ்மீரில் பொது மக்கள்  சமூகத்துடன் ஒரு அற்புதமான ஈடுபாட்டைக் கொண்டிருந்தனர். அம்மாநிலத்தின்  அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள்  பெரும் பங்களிப்புடன்  கலந்து கொண்டனர்.

மக்கள் தூதர்களைச் சந்திக்க தன்னிச்சையாக  சந்தித்தனர்.  370 வது பிரிவுக்கு  எந்த எதிர்ப்பும் துக்கம் தெரிவிக்கவில்லை, பாக்கிஸ்தானின் குறுக்கீடு இல்லாமல்  தங்கள் எதிர்காலத்தை எதிர்நோக்குகிறார்கள். 
 

PREV
click me!

Recommended Stories

Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
Breaking News: மஃப்டியில் வந்த அமைச்சர்.! ரூ.4,000 மாமூல் கேட்ட அர்ச்சகர்கள் - திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு.!