பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு..!! தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு..!

By Ezhilarasan BabuFirst Published Sep 12, 2020, 1:10 PM IST
Highlights

ஏற்கனவே எழுத்து தேர்வு எழுதி, எழுத்து தேர்வு மற்றும் அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து 35 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று செய்முறை தேர்வில் பங்கேற்காத காரணத்தால் தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது செய்முறை தேர்வில் மட்டும் பங்கேற்க வேண்டும்.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ள மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்கள்( தட்கல் உட்பட) தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை 15-9-2020 செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

அதேபோன்று 26-3-2020 அன்று நடைபெறாமல் இரத்து செய்யப்பட்ட வேதியியல், பொறியியல்,  கணக்குப்பதிவியல் மற்றும் தொழிற்கல்வி கணக்குப்பதிவியல் பாடங்களுக்கான மேல்நிலை, முதலாமாண்டு பொதுத் தேர்வுகளை எழுத ஏற்கனவே விண்ணப்பித்திருந்த  தனித்தேர்வர்கள் செப்டம்பர்,அக்டோபர் மாதங்களில் நடைபெறும் மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு எழுதுவதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை. 15-9-2020 செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேலும் விண்ணப்ப எண் இல்லாத காரணத்தால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று முதலில் hall ticket என்ற வாசகத்தில் click செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள HSE SEPTEMBER 2020 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD என்ற வாசகத்தை click செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண், நிரந்தர பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அவர்களுடைய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேல்நிலை முதலாம் ஆண்டு பிளஸ் 1 ஆரியர் மற்றும் இரண்டாம் ஆண்டு பிளஸ் 2 துணைத் தேர்வுகள் இரண்டையும் எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும்.

செய்முறை தேர்வு உள்ள பாடங்களில் தேர்ச்சி பெறாத ஒரு கணம் குறிப்பு:-

ஏற்கனவே எழுத்து தேர்வு எழுதி, எழுத்து தேர்வு மற்றும் அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து 35 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று செய்முறை தேர்வில் பங்கேற்காத காரணத்தால் தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது செய்முறை தேர்வில் மட்டும் பங்கேற்க வேண்டும். அவ்வகை தேர்வர்கள் மீண்டும் எழுத்து தேர்வினை எழுத வேண்டாம். ஏற்கனவே செய்முறை தேர்வில் பங்கேற்காமல் எழுத்துத்தேர்வு மற்றும் அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து 35 மதிப்பெண்ணுக்கும்  குறைவாக பெற்று தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு ஆகிய இரண்டையும் கட்டாயம் எழுத வேண்டும். 

செய்முறைத் தேர்வு செய்ய வேண்டிய தனித்தேர்வர்கள் கருத்தியல் தேர்வு (theory exam) நடைபெறும் நாட்களுக்கு முன்னரே தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி செய்முறைத்தேர்வு (practical exam) நடைபெறும் தேதி குறித்து விவரத்தை அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு இன்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் செப்டம்பர் அக்டோபர் 2020 மேல்நிலை முதலாமாண்டு இரண்டாமாண்டு துணை தேர்வுகளுக்கான கால அட்டவணை time table www.dji. tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!