ப்ளக்சிபில் முதல்வர், டைனமிக் முதல்வர், சின்சியர் முதல்வர்.. ஸ்டாலினை பாராட்டிய ஆளுநர் RN ரவி.. அப்பாவு.

By Ezhilarasan BabuFirst Published Jan 3, 2022, 4:42 PM IST
Highlights

தமிழக முதலமைச்சரை தமிழக ஆளுநர் அவர்கள் ப்ளக்சிபில் முதல்வர். டைனமிக் முதல்வர்.சின்சியர் முதல்வர் என பாராட்டியதாவும் மழை வெள்ள பாதிப்பு நேரங்களில் நேரடியாக களத்திற்கு சென்று பணிகளை துரிதப்படுத்தி அதை ஆளுநர் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

தமிழக முதல்வரை ஆளுநர், ப்ளக்சிபில் முதல்வர்,டைனமிக் முதல்வர்,சின்சியர் முதல்வர் என பாராட்டினார் என்றும் ஆளுநருக்கும் முதலமைச்சருக்குமான உறவு சுமுகமாக உள்ளது என்றும் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரை வருகிற 5ம் தேதியுடன் தொடங்கவுள்ளது இந்நிலையில் கலைவாணர் அரங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவும் மற்றும் துணைத்தலைவர் பிச்சாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, வருகிற ஐந்தாம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதாகவும் சமூக இடைவெளியை பின்பற்றியும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைபிடித்து கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். 

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க கூடிய ஊழியர்கள் பத்திரிக்கையாளர்கள் காவல்துறையினர் என அனைவருக்கும் பரிசோதனை கட்டாயம் எனவும் தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார் சட்டமன்ற கூட்டத்தொடரை நேரலையில் ஒளிபரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிந்த உடன் பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.

ஆளுநர் அவர்களுக்கு சட்டமன்ற மரபின் அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாவும், அவருடனான சந்திப்பின் போது தமிழக முதலமைச்சரை தமிழக ஆளுநர் அவர்கள் ப்ளக்சிபில் முதல்வர். டைனமிக் முதல்வர்.சின்சியர் முதல்வர் என பாராட்டியதாவும் மழை வெள்ள பாதிப்பு நேரங்களில் நேரடியாக களத்திற்கு சென்று பணிகளை துரிதப்படுத்தி அதை ஆளுநர் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.எனவே ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையேயான உறவு சுமுகமாக இருப்பதாக தெரிவித்தார். ஆளுநர் உரையை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பார்க்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சபாநாயகராக தான் பணியாற்றும் நிலையிலும் தன்னை வாக்களித்து தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்காக அவர்களின் கோரிக்கைகளையும் சட்டப்பேரவையில் கேட்பேன் எனவும் தெரிவித்தார். ஆளுநர் உரை வழக்கம்போல் இந்த ஆண்டும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.  

click me!