முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா செத்ததுக்கு காரணமே இவங்கதான் !! எடப்பாடி பகீர் குற்றச்சாட்டு !!

By Selvanayagam PFirst Published Oct 17, 2019, 8:04 PM IST
Highlights

திமுக தொடுத்த சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு ஜெயலலிதா உயிரிழந்ததாகவும், அவரது இறப்புக்கு திமுகவும், ஸ்டாலினும்தான காரணம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பகீர் குற்றம்சாட்டியுள்ளார்.
 

தமிழக முன்னாள் முதலமைச்சரும்  அதிமுக பொதுச்செயலாளருமான  ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் சென்னை அப்பொலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். . இது அதிமுகவுக்கு  பெரும் இழப்பாகக் கருதப்பட்டது.

இதையடுத்து அதிமக இரண்டாக உடைந்தது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில்  உள்ளார். 

தற்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் முதலமைச்சர்  பதவியில் எடப்பாடி பழனிசாமியும் ,துணைமுதலமைச்சராக  ஓ. பன்னீர் செல்வமும் தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றனர்.

இதனிடையே விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட  முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி  பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டார்.

திமுக தொடுத்த வழக்கின் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு ஜெயலலிதா உயிரிழந்தார் என்றும்,  ஜெயலலிதா உயிரிழந்ததற்குக் காரணமே திமுகவும், ஸ்டாலினும்தான் என நான் பகிரங்கமாக கூறுகிறேன் என அவர் குற்றம்சாட்டினார்.

ஆனால் ஜெயலலிதா இறப்புக்கு நாங்கள் கவலைப்படவில்லை என ஸ்டாலின் கூறுவது கண்டிக்கத்தக்கது  எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். முதலமைச்சரின்  இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!