குறிப்பா இந்த 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுத்துக் கட்டப்போகிறது..!! மக்களே ரொம்ப எச்சரிக்கையா இருங்க..

By Ezhilarasan BabuFirst Published Nov 7, 2020, 1:44 PM IST
Highlights

அடுத்த 72 மணி நேரத்தில் (9-10-2010 ) பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் (17-11-2020) மற்றும் (8-11-2020) பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கனமழையும் பெய்யக்கூடும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அடுத்த 72 மணி நேரத்தில் (9-10-2010 ) பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை, பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்சையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும்  ஒட்டி பதிவாகக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசையுத், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாககூடும். கடந்த 24 மணி நேரத்தில், இடையப்பட்டி (மதுரை) 7 செண்டி மீட்டர் மழையும், காரியாபட்டி (விருதுநகர்) 6 சென்டிமீட்டர் மழையும், விரகனூர் அணை (மதுரை) மானாமதுரை (சிவகங்கை) பேரையூர் (மதுரை) 5 சென்டிமீட்டர் மழையும், திருப்புவனம் (சிவகங்கை) தல்லாகுளம் (மதுரை) பிளவக்கல் (விருதுநகர்) காயல்பட்டினம் (தூத்துக்குடி) கடலூர், தேனி, திருச்செந்தூர், (தூத்துக்குடி) சோழவந்தான் (மதுரை) தலா 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 

 

click me!