எடப்பாடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் - இணைப்பை சாத்தியமாக்க தீவிர முயற்சி??

 
Published : Aug 01, 2017, 04:21 PM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
எடப்பாடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் - இணைப்பை சாத்தியமாக்க தீவிர முயற்சி??

சுருக்கம்

edappadi meeting with ministers in admk office

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 8 அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது எடப்பாடி தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இந்த அரசை காப்பாற்றி கொள்ள எடப்பாடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

எடப்பாடிக்கு எதிராக அவர்கள் தரப்பு எம்.எல்.ஏக்களே டிடிவிக்கு ஆதரவாகவும், தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே 60 நாட்கள் கெடு விதித்திருந்த தினகரன் மீண்டும் கட்சி பணிகளை தொடர்வேன் என தெரிவித்துள்ளதால் எடப்பாடி தரப்பு ஆடிபோய் உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் அடுத்தகட்ட பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. இதைதொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

ஆனால் எடப்பாடி பழனிசாமியை டிடிவி ஆதரவாளர்களான தங்க தமிழ்செல்வனும், தளவாய் சுந்தரமும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

இந்நிலையில் இதை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் எடப்பாடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் 8 அமைச்சர்கள் பங்கேற்று அணிகள் இணைப்பு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!
வங்கதேச தேசத்தின் அடுத்த பிரதமராகும் ‘இருண்ட இளவரசர்’..? யார் இந்த ‘டேஞ்சரஸ்’ தாரிக் ரஹ்மான்..?