பரபரப்பான அரசியல் சூழலில், பிரதமரிடம் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கை என்ன ..?

Asianet News Tamil  
Published : Feb 27, 2017, 07:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
பரபரப்பான அரசியல் சூழலில், பிரதமரிடம் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கை என்ன ..?

சுருக்கம்

tamil nadu cm meets pm on monday

தமிழக மக்களின் உணர்வு மிக்க  ஜல்லிக்கட்டை  நிரந்தரமாக  நடத்த  அனுமதி  வழங்கியதற்கு,  பிரதமருக்கு  நன்றியை  தெரிவித்ததாக கூறி ,  தமிழக  முதல்வர்  பழனிசாமி தன் உரையை  தொடங்கினார்

மேலும் பல கோரிக்கைகள்  அடங்கிய  மனுவை,  முன் வைத்துள்ளதாகவும்,   நிறைவேற்றப்பட வேண்டிய பல  கோரிக்கைகள்  அடங்கிய மடலை, பிரதமரிடம்  சமர்ப்பித்துள்ளதாகவும்  முதல்வர்  தெரிவித்தார். 

தமிழகத்தில்  எய்ம்ஸ்  மருத்துவமனை :

தமிழகத்தில் , எய்ம்ஸ் மருத்துவமனை  நிறுவ வேண்டும் என்றும்,  காவிரி  நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் கோரிக்கை  வைத்துள்ளார்  தமிழக  முதல்வர்  எடப்பாடி  பழனிசாமி .

மற்ற  கோரிக்கைகள் :

நிலுவையில்  உள்ள  ரூ 17,333  கோடியை விடுவிக்க  வேண்டும்

புயல்  நிவாரண நிதியாக  ரூ 39,566  கோடி  தேவை 

வர்தா புயல்  நிவாரணத்தொகையாக  ரூ 22, 573 கோடி

இலங்கை  தமிழர்களுக்கு  இரட்டை குடியுரிமை  வழங்க  வேண்டும்

நீட்  தேர்விலிருந்து  தமிழகத்திற்கு  விலக்கு அளிக்க  வேண்டும்

வறட்சி  நிவாரண  நிதி  கோரிக்கை

அவினாசி அத்திக்கடவு  திட்டத்தை  நிறைவேற்ற வேண்டும்

நதிகளை  இணைக்க  வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாக  முதல்வர்   பழனிசாமி தெரிவித்தார் .

 

 

\

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!