அதிமுகவுக்குள் வெடிக்கப்போகும் பூகம்பம்... கட்சியை விட்டு நீக்கப்போகும் ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ்..!

By Thiraviaraj RMFirst Published Jun 16, 2021, 12:41 PM IST
Highlights

அதிமுக வேட்பாளரை வசைபாடி பேசும் ஆடியோ ஆதாரம் உட்பட பல ஆதாரங்கள் திரட்டப்பட்டு மேலிடத்தின் கையில்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.

அதிமுகவில் கலகத்தை ஏற்படுத்த தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்களை சசிகலா வெளியிட்டு வரும் நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக 15க்கும் மேற்பட்டவர்களை அக்கட்சியின் இரட்டை தலைமை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறது. இந்த நிலையில்தான் கட்சியை விட்டு தூக்கியடிக்கும் பட்டியலில் வேலூரை சேர்ந்த மேலும் 2 நிர்வாகிகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 நிர்வாகிகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழைய கட்சி பிரமுகர்கள் 3 பேர் என களையெடுப்புக்கான அடுத்த பட்டியல் ரெடியாகி உள்ளதாம்.

இவர்கள் சட்டமன்ற தேர்தலில் உள்ளடி வேலை பார்த்து, தங்கள் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்த விவகாரத்தின் அடிப்படையில் நீக்கப்பட உள்ளார்களாம். ஆனால், வேலூர் மாவட்டத்தில் பேச்சு வேறாக இருக்கிறது. காரணம், வேலூர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய  பிரமுகர், வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளரை வசைபாடி பேசும் ஆடியோ ஆதாரம் உட்பட பல ஆதாரங்கள் திரட்டப்பட்டு மேலிடத்தின் கையில்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.

இதுபற்றி அறிந்த உள்ளூர் மூத்த அதிமுக நிர்வாகிகள், இரண்டாம் கட்ட பட்டியல் இருக்கட்டும். கட்சிக்குள் குறுநில மன்னராகவே லோக்கலில் வலம் வந்து ஓசூர், பெங்களூரு, ஏலகிரி என்று கடந்த 5  ஆண்டுகளில் சொத்துகளை குவித்து கட்சியை காவு வாங்கியவர், வேலூர் மாவட்டத்தில் அதிமுகவை மண்ணை கவ்வ வைத்த முன்னாள் அமைச்சர் வீரமணியை நீக்கினாலே கட்சிக்கு பாதி உயிர் வந்துவிடும். அதைவிட்டுவிட்டு சசிகலாவிடம் பேசினார் என்பதற்கு எல்லாம் கட்சியில் இருந்து நீக்கினால் கட்சி எப்டி உருப்படும் என்று புலம்பி வருகிறார்கள். கட்சி உயிர்ப்போடு இருக்க வேண்டும் என்றால் வீரமணியை கட்சியில் இருந்து கட்டம் கட்ட வேண்டும் என்று இரட்டை தலைமையை வலியுறுத்தி வருகிறார்கள். 

click me!