கொரோனாவிலிருந்து எப்படி உயிர் பிழைத்தேன் தெரியுமா..? துரைமுருகன் விளக்கம்..!

By Thiraviaraj RMFirst Published May 26, 2021, 4:18 PM IST
Highlights

கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது. இப்பிரச்சனை குறித்து தமிழக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

தடுப்பூசியால் தான் கொரோனாவில் இருந்து உயிர் பிழைத்தேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். கொரோனா பாதிப்பில் இருந்து நம்மை காத்துக் கொள்ள தடுப்பூசி தான் ஒரே வழி என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தற்போது அதிகளவில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டும் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

தடுப்பூசிகள் வாங்க தமிழக அரசு டெண்டர் விடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல், செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல் தடுப்பூசி தாயரிக்கும் நிறுவனத்திலும் தடுப்பூசி தயாரிப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. தடுப்பூசி தான் நமது பாதுகாவலன், நோயிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், தடுப்பூசியால் தான் உயிர் பிழைத்தேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது. இப்பிரச்சனை குறித்து தமிழக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகன் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டதால் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்.

click me!