நீதிகேட்டு திமுக மகளிரணி பேரணி... #இடுப்பு_பத்திரம் #இடுப்புகிள்ளிதிமுக

Published : Oct 05, 2020, 02:50 PM IST
நீதிகேட்டு திமுக மகளிரணி பேரணி... #இடுப்பு_பத்திரம்  #இடுப்புகிள்ளிதிமுக

சுருக்கம்

உ.பி.,யில் நடந்த பாலியல் வன்கொடுமை படுகொலையை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் இத ஹேஸ்டாக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.   

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கரூர், வெங்கமேட்டில் திமுக சார்பில்  பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.  அந்த ஆர்ப்பார்ட்டத்தில் திமுக மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயயமணிக்கு, வடக்கு நகர இளைஞர் அணி அமைப்பாளர் பிரபாகரன் பாலியல் தொலை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக திமுக தலைமைக்கு புகார் சென்றதை அடுத்து ஜெயமணி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பாலியல் தொல்லை கொடுத்த பெண் நிர்வாகியை நீக்கம் செய்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்தது அப்போது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது நடந்தது கடந்த ஏப்ரல் மாதத்தில். ஆனால் இதனை சுட்டுக்காட்டி #இடுப்புகிள்ளிதிமுக என்கிற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அத்தோடு உ.பி.,யில் நடந்த பாலியல் வன்கொடுமை படுகொலையை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் இத ஹேஸ்டாக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

 

 

PREV
click me!

Recommended Stories

திமுகவில் சர்ப்ரைஸ்.. அதிமுகவில் பாமகவுக்கு வாய்ப்பு.. ராஜ்ய சபா வேட்பாளர்கள் லிஸ்ட் இதோ!
கை நழுவிப்போன காங்கிரஸ்.. பாஜக கூட்டணியில் விஜய்..? அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்..!