கொரோனாவை வைத்து அரசியல் விளம்பரம் தேடும் திமுக... செல்லூர் ராஜூ தாறுமாறு குற்றச்சாட்டு..!

Published : May 27, 2020, 12:30 PM IST
கொரோனாவை வைத்து அரசியல் விளம்பரம் தேடும் திமுக... செல்லூர் ராஜூ தாறுமாறு குற்றச்சாட்டு..!

சுருக்கம்

கொரோனாவை வைத்து திமுக அரசியல் விளம்பரம் தேடுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.    

கொரோனாவை வைத்து திமுக அரசியல் விளம்பரம் தேடுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.  

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, செங்குன்றம் சாலையில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை  பல்பொருள் அங்காடி  புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதனை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

இதில் அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ’’கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் இந்தியாவிலேயே சிறப்பாகச் செயல்படுகிறது. ஊரடங்கை கருத்தில் கொண்டு, இதுவரை  2 கோடியே 2 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா அரிசி, உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா விவகாரத்தில் திமுக நாடகம் ஆடுகிறது. கொரோனாவை வைத்து திமுக அரசியல் விளம்பரம் தேடுகிறது’’என அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விஜய் கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்த டாப் ஹீரோ - அப்போ ADMK -வுக்கு கம்பி நீட்டிவிட்டாரா?
சசிகலாவை முடக்கிய சட்ட விதிகள்.! வாழ்த்தி பாடியவர்களே, வசைபாடிய அரசியல்.! என்ன நடந்தது தெரியுமா?