திமுக முக்கிய நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை... அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

By vinoth kumarFirst Published Aug 27, 2019, 5:21 PM IST
Highlights

நாமக்கல் திமுக மேற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் திமுக மேற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்தவர் மருத்துவர் ஆனந்த். இவர் காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியில் மருத்துவமனை அமைத்து மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவரது மனைவி தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும், நாமக்கல் திமுக மேற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளராகவும் உள்ளார். 

இந்நிலையில், பரமத்திவேலூரை அடுத்த செங்கப்பள்ளியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஆனந்தன் திடீரென தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கி சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்க்கும் போது ஆனந்த் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.

 

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விவசாய தோட்டத்தில் கிடந்த ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திமுக பிரமுகர் தற்கொலைக்காண காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இவர் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலுடன் சோகமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இவரது தற்கொலை திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!