பட்டப்பகலில் திமுக செயற்குழு உறுப்பினருக்கு அரிவாள் வெட்டு... தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

By vinoth kumarFirst Published Oct 13, 2020, 5:56 PM IST
Highlights


சென்னை கே.கே. நகரில் திமுக செயற்குழு உறுப்பினர் தனசேகரனுக்கு  அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை கே.கே. நகரில் திமுக செயற்குழு உறுப்பினர் தனசேகரனுக்கு  அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன்( 56 ). இவர் திமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். வீட்டில் உள்ள இவரது அலுவலகத்தில் அமுதா (34 )என்ற பெண் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். அமுதா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில் இன்று அலுவலகத்தில் பணியில் இருந்த அமுதாவை அவரது கணவர் பொன்வேல் பேசுவது போல் நடித்து அரிவாளால் வெட்டியுள்ளார். அலறல் சத்தம் கேட்டதால் தடுக்க முயன்ற தனசேகரனுக்கும் கை மற்றும் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. ரத்த வௌ்ளத்தில் படுகாயமடைந்த தனசேகரன் வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல், படுகாயமடைந்த அமுதா கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அமுதாவின் கணவர் பொன்வேலை தேடி வருகின்றனர். 

click me!