வீட்டுக்கு போகும் நாள் விரைந்து வந்துவிட்டது.. நடுக்கத்தில் அதிமுக அமைச்சர்கள்..திமுக மாஜி அமைச்சர் தாறுமாறு!

By Asianet TamilFirst Published Jun 23, 2020, 9:36 PM IST
Highlights

இரவு பகல் பாராமல் கல்லா கட்டும் தொழிலைக் கனகச்சிதமாகச் செய்துகொண்டு கொரோனா காலத்தில் டெண்டர் விடுவதிலும் அதைத் திறப்பதிலுமே குறியாக இருக்கும் முதல்வர் பழனிசாமி அரசின் யோக்கியதை தமிழக மக்களுக்குத் தெரியாமல் இல்லை. 'ஊரடங்குக்குள் ஊரடங்கு' என்ற 'அரிய கண்டுபிடிப்பால்' தமிழகத்தின் தலைநகரை ஏற்கனவே கொரோனாவிற்கான தலைமையிடமாக மாற்றிவிட்டு, இன்றைக்குத் தமிழகத்தின் ஏனைய முக்கிய நகரங்களை எல்லாம் ஊரடங்குக்குள் உட்படுத்திவிட்டு தமிழகம் முழுவதும் பரவிவரும் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில்லாமல் தமிழக முதல்வர் பழனிசாமியின் அரசு நிற்பது அகில இந்தியாவிலும் சந்தி சிரித்துக் கொண்டு இருக்கிறது.
 

அதிகார ருசியைக் கடைசி காலத்திலும் ஒவ்வொரு சொட்டும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் வீட்டுக்குப் போகும் நாள் விரைந்து வருவதைக் கண்டு நடுங்குகிறார்கள் என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


திமுகவுக்கு எதிராக அவ்வப்போது அதிரடி கருத்துகளைத் தெரிவித்துவருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அவரைக் கண்டித்து ஏற்கனவே விருதுநகரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கைக்கு எதிராக முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
அதில், “தமிழக அரசியலில், தரமில்லாதவர்களின் கூடாரமாக அதிமுக மாறிவிட்டதை நிரூபிக்கும் வகையில் அபத்தக் களஞ்சியமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டு திமுக தலைவர் மீதும், கழகத்தின் முன்னணியினர் மீதும் சேறுவாரி இறைக்கும் கீழ்த்தரமான வேலையில் இறங்கியிருக்கின்றார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கில் பரவி தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கைச் சூழலைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தையும் பறித்துக் கொண்டு மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘கொரோனா’ என்னும் நோய்த் தொற்றில் இருந்து தமிழக மக்களைக் காக்க ஒரு துளியும் வக்கில்லாமல், கழகத் தலைவரை நோக்கி அவதூறுகளை அள்ளி வீச முற்பட்டிருக்கிறார்கள் ஊழலில் ஊறி உளுத்துப்போன இந்த உன்மத்தர்கள்.


இரவு பகல் பாராமல் கல்லா கட்டும் தொழிலைக் கனகச்சிதமாகச் செய்துகொண்டு கொரோனா காலத்தில் டெண்டர் விடுவதிலும் அதைத் திறப்பதிலுமே குறியாக இருக்கும் முதல்வர் பழனிசாமி அரசின் யோக்கியதை தமிழக மக்களுக்குத் தெரியாமல் இல்லை. 'ஊரடங்குக்குள் ஊரடங்கு' என்ற 'அரிய கண்டுபிடிப்பால்' தமிழகத்தின் தலைநகரை ஏற்கனவே கொரோனாவிற்கான தலைமையிடமாக மாற்றிவிட்டு, இன்றைக்குத் தமிழகத்தின் ஏனைய முக்கிய நகரங்களை எல்லாம் ஊரடங்குக்குள் உட்படுத்திவிட்டு தமிழகம் முழுவதும் பரவிவரும் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில்லாமல் தமிழக முதல்வர் பழனிசாமியின் அரசு நிற்பது அகில இந்தியாவிலும் சந்தி சிரித்துக் கொண்டு இருக்கிறது.
முதல்வரின் அமைச்சரவை சகாக்களையும் அவரது அலுவலகத்தின் அதிகாரிகளையுமே நோய்த்தொற்றில் இருந்து காப்பாற்ற முடியதாவர்கள், ஒரு பத்திரிகை அலுவகத்தில் நாற்பது பேரை குணப்படுத்தி விட்டதாகத் தம்பட்டம் அடித்து அறிக்கை அளிப்பது வெட்கக்கேடு. 'ஆகப்பெரிய அறிவோடு' இந்தக் கொரோனா பேரிடர் காலத்தைத் தங்களுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பாகக் கருதி மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளில் கிருமி நாசினி தெளிப்பது வரை ஊழல் செய்து கொண்டு இருப்பவர்கள் இன்னும் சில மாதங்களில் தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டு தாங்கள் செய்த தவறுகளுக்கு தண்டனை பெறப் போவது உறுதி.
அதிகார ருசியைக் கடைசி காலத்திலும் ஒவ்வொரு சொட்டும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் வீட்டுக்குப் போகும் நாள் விரைந்து வருவதைக் கண்டு நடுங்குதுயர் கொண்டு மனப்பிறழ்வு அடைந்ததன் விளைவே ராஜேந்திர பாலாஜியின் இந்த அறிக்கை.“மூன்றே நாட்களுக்குள் கொரோனாவை முடித்துக் காட்டுவோம்” என்று முழங்கிய முதல்வர் இன்றைக்கு “என் கையில் என்ன இருக்கிறது” என்று கைவிரித்து நிற்கும் அளவு கொரோனா ஒழிப்பில் முழுத்தோல்வி அடைந்துவிட்ட பரிதாப நிலையை மூடி மறைப்பதற்கென அறிக்கை ஒன்றை எழுதி அமைச்சர் மூலம் வெளியிடுகிறார்.


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் பொறுப்பில் அமர்ந்திருந்தால் தானே நாட்டு மக்களைப் பற்றிக் கவலை வரும். கூவத்தூர் கூடாரத்தில் நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து முதல்வர் பொறுப்பில் ஒட்டிக்கொண்டவர்கள் எரிகிற கொள்ளியில் பிடுங்கிய வரை ஆதாயமாகத்தான் முதல்வர் பதவியைக் கருதுவார்கள். மன்னன் எவ்வழியோ அவ்வழி தாங்களும் என இருக்கும் ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் அதே வழியில் இன்றைக்குப் பயணிக்கின்றார்கள். எதிர்கட்சித் தலைவர் விடுக்கும் ஆக்கப் பூர்வமான யோசனைகளைக் கேட்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட கூட்டமுடியாது என்று கூறிய இறுமாப்பு இன்னும் குறையாமல் அறிக்கை எனும் பெயரில் அடிப்பொடிகளை விட்டு அக்கப்போர் செய்யாமல் எஞ்சியிருக்கும் நாட்களிலாவது தமிழக மக்களைத் துயரக்கடலில் தள்ளிவிடாமல் ஆட்சி நடத்த முதலமைச்சர் பழனிசாமி அவர்களின் அரசு முன்வர வேண்டும்” என்று அறிக்கையில் கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

click me!